செய்திகள் :

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; நகைகளைத் திருப்பிக் கேட்ட பெண்; கொடூரமாகக் கொன்ற காவலர்

post image

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணி. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரியா முடிவைத்தானேந்தல் மெயின் ரோட்டில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.

பிரியாவின் உடன்பிறந்த சகோதரி சுப்புலட்சுமி. கணவர் இறந்ததால் பிரியாவுடன் வீட்டோடு வசித்து வந்தார். இந்த நிலையில், சுப்புலட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

முத்துக்குமார் தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். பணத்தேவைக்காக முத்துலட்சுமியிடம் இருந்து 20 சவரன் தங்க நகைகளை வாங்கி முத்துக்குமார் அடகு வைத்ததாகக் கூறப்படுகிறது.

இவர்களின் திருமணம் மீறிய உறவு விவகாரம் பிரியாவுக்குத் தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இந்த நிலையில், தன் அக்காவிடமிருந்து பெற்ற 20 சவரன் தங்கநகைகளை திருப்பித் தருமாறு முத்துக்குமாரிடம் பிரியா கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. நகையைத் திருப்பித் தராவிட்டால் போலீஸில் புகார் அளிக்கப் போவதாக பிரியா கூறினாராம். இதனால், ஆத்திரமடைந்த முத்துக்குமார், பிரியா தனது ஜெராக்ஸ் கடையைப் பூட்டிக் கொண்டிருந்தபோது அங்கு சென்று முத்துக்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த முத்துக்குமார் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் பிரியாவின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

புதுக்கோட்டை காவல் நிலையம்

இதில் முகம் சிதைந்து பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரைக் கைது செய்தனர். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த முத்துக்குமார் ஏற்கனவே மாமனார் உள்ளிட்ட இருவரை அருவாளால் வெட்டிய வழக்கில் புதுக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே வந்த நிலையில்தான் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்காடு பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கி கொன்ற வழக்கு - கொடூர இளைஞனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகேயுள்ள கே.வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவன் புருஷோத்தமன் என்கிற ரஞ்சித் ( 30). இவன் கடந்த 2018-ம் ஆண்டு, ஒழலை கிராமத்தில் வசித்துவந்த பதினோராம் வகுப்பு மாணவியிடம் பழகி வ... மேலும் பார்க்க

திருச்சி: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; பள்ளியை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய தலைமை ஆசிரியர்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்த உயர் நிலைப் பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வர... மேலும் பார்க்க

லால்குடி: செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது நிகழ்ந்த சோகம்; இரு இளைஞர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வடுகர்பேட்டை, அன்னை நகர் பகுதியில் உள்ள தேவனாதன் என்பவரது வீட்டில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக, சகானா என்ற தனியார் கழிவு அகற்று... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: மரகத முருகன் சிலை திருட்டு - மர்ம கும்பல் கைவரிசை காட்டியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரகதத்தால் ஆன மூலவர் முருக்ன் சிலை இருந்தது. சம்பவத்தன்று இரவு கோயிலின் பூட்... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; மார்பிங் போட்டோஸ் - இரண்டு குழந்தைகளின் தந்தை கைதான பின்னணி!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் வேலை செய்து வந்தார். இவருடன் ரஞ்சித்குமார் என்பவரும் வேலை செய்து வந்தார். ரஞ்சித்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: முன்னாள் அமைச்சரின் மகன்கள் மோதல்: தம்பியை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்ற அண்ணன்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி முன்னாள் அதிமுக அமைச்சரான மறைந்த வெங்கடாசலத்தின் மகன்களுக்கு இடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தம்பியை அண்ணனே கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபர... மேலும் பார்க்க