செய்திகள் :

தென்காசி பேருந்து விபத்து: தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி கிருத்திகாவிற்கு அரசு வேலை!

post image

தென்காசியில் கடந்த 24ம் தேதி இடைகால் அருகே துரைச்சாமிபுரம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். அன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த எம்.ஆர். கோபாலன் ஆகிய இரண்டு தனியார் பேருந்துகள் இடைகால் அருகிலுள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் பயங்கரமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் பேருந்திற்குள் இருந்த ஐந்து பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிருத்திகா

மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விபத்து ஏற்படுத்திய பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

பணி ஆணை வழங்கிய ஆட்சியர்

உயிரிழந்தவர்களில் பார்வை மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் தாயும் ஒருவர். அந்த பெண்ணிடம் தொலைபேசியில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.

சிறுவயதிலேயே தந்தையையும் இழந்த நிலையில், இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பெண் கிருத்திகாவுக்கு புளியங்குடி நகராட்சியில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையினை அந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார்.

காமலாபுரம்: இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகும் அங்கன்வாடி கட்டடம்; இந்த ஆண்டாவது கட்டப்படுமா?!

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாயி அம்மன் கோயில் அருகில் இருந்த அங்கன்வாடி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையும் புதிதாக கட்டடம் அமைக்க... மேலும் பார்க்க

`பசுமை வனம் டு பாலைவனத் தோட்டம்' - கோவையின் புதிய அடையாளம் செம்மொழிப் பூங்கா திறப்பு! | Photo Album

செம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்புசெம்மொழிப் பூங்கா திறப்பு... மேலும் பார்க்க

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்கா! - என்ன ஸ்பெஷல்?

மின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்காமின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்காமின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்காமின்னொளியில் ஜொலிக்கும் கோவை செம்மொழிப் பூங்காமின்னொளியில் ஜொல... மேலும் பார்க்க

"தமிழ்நாடு தனித்து நிற்கிறதா?"- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சிற்கு திமுக அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்!

"தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை" என்றும் "திராவிடம் என்பது கற்பனை, தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர், தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகி... மேலும் பார்க்க

Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to?

சில நேரங்களில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யும்போது, வேலை செய்யாமல் போய் விடுகிறது. இதனால், டோல்கேட்டில் தேவையில்லாத டென்சன் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், 'KYV (Know Your Vehicle)' அப்டேட் செய்யாமல்... மேலும் பார்க்க

திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்; அகற்ற முடியாமல் திணறும் மாநகராட்சி - பிரச்னை என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் திடக்கழிவு மேலாண்மையில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.முன்னதாக, திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் முன்பு ஆங்காங்கே பாறைக்குழிகளில் கொட்டப்பட்... மேலும் பார்க்க