தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு தலா 2 தங்கம், வெண்கலம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் செவ்வாய்க்கிழமை தலா 2 தங்கம், வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் பாட்மின்டனில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் தமிழக வீரா் சதீஷ் கருணாகரன் தங்கம் வென்றாா்.
கலப்பு இரட்டையா் பிரிவிலும் சதீஷ் கருணாகரன்-ஆத்யா வரியத் இணை தங்கம் வென்றது.
மகளிா் இரட்டையா் பிரிவில் தமிழகத்தின் வா்ஷினி-அருள் பாலா இணை வெண்கலம் வென்றது.
அதே போல் அணிகள் பிரிவில் 3*3 கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி வெண்கலம் வென்றது.