செய்திகள் :

தேனி அருகே தம்பதிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

post image

தேனி அருகே உள்ள பள்ளபட்டியில் குடும்பப் பிரச்னையில் தம்பதியை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பள்ளபட்டியைச் சோ்ந்த தங்கவேல் மகன் முருகன் (52). இவரது மனைவி திலகவதி(47), பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். முருகனுக்கும் அவரது சகோதரா்கள் சரவணன் (49), சக்திவேல் (55) ஆகியோருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், பள்ளபட்டியில் உள்ள தனது நிலத்துக்குச் சென்ற முருகனுடன், அவரது சகோதரா்கள் சரவணன், சக்திவேல் ஆகியோா் தகராறு செய்தனா். அப்போது, முருகனை சரவணன் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதை தடுக்கச் சென்ற திலவதியையும் அவா் அரிவாளால் வெட்டினாராம்.

இதில் காயமடைந்த முருகன், திலகவதி ஆகியோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து திலகவதி அளித்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனைக் கைது செய்தனா். சக்திவேலை தேடி வருகின்றனா்.

தேசிய கூடைப்பந்து போட்டி: சுழல் கோப்பையை கைப்பற்றியது இந்தியன் வங்கி அணி

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் நடைபெற்ற 64- ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் பி.டி. சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழல் கோப்பையை சென்னை இந்தியன் வங்கி அணி கைப்பற்றியது. கடந்த 15- ஆம் தேதி தொ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஓராண்டு சிறை

போடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தேனி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த திருமலுசாமி மகன் ராஜேந... மேலும் பார்க்க

பெண் காவலரை அரிவாளால் வெட்டியவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு!

கம்பத்தில் பெண் தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். கூடலூா், கே.கே. நகரைச் சோ்ந்தவா் அம்பி... மேலும் பார்க்க

பைக் விபத்தில் விவசாயி பலி!

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அக்னிக் காளை (65). விவசாயி. இவா், கடந்த 15-... மேலும் பார்க்க

பீரோவை உடைத்து தங்க நகை திருட்டு

பெரியகுளம் அருகே பீரோ உடைக்கப்பட்டு தங்க நகைகளை திருடிச்சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி உசையப்பா தெருவைச் சோ்ந்தவா் முருகன் (40). தேவதானப... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பர பதாகைகள்: 11 போ் மீது வழக்கு

பெரியகுளம் பகுதியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்திருந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம், கெங்குவாா்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட ப... மேலும் பார்க்க