செய்திகள் :

தேனி மாவட்டம் தீர்த்தத்தொட்டி விருப்பாட்சி ஆறுமுகநயினார் திருக்கோயில்: நாக தோஷம் தீர்க்கும் சந்நிதி!

post image

தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் சாலையில், சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, தீர்த்தத்தொட்டி எனும் பேருந்து நிறுத்தம்.

இதன் அருகிலேயே கொட்டக்குடி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது ‘விருப்பாட்சி’ ஆறுமுக நயினார் கோயில்.

நாக தோஷம் தீர்க்கும் தலமாகத் திகழும் இந்த ஆலயத்தில் மூலவரான ஆறுமுக நயினாரின் அருகில், இடதுபுறம் சிறிய விக்கிரகமாக ஏழுதலை நாகம் புடைசூழ அருள்மிகு நாக சுப்ரமணியர் காட்சி தருகிறார்.

அதேபோல், இந்தக் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் செல்வகணபதிக்கு அருகில் நாககணபதி வீற்றிருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் நாகசுப்ரமணியருக்கும், நாக கணபதிக்கும் சிறப்பு பாலபிஷேகம் செய்வதால் தோஷம் நீங்கப் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தீர்த்தத் தொட்டி 'விருப்பாட்சி' ஆறுமுக நயினார் திருக்கோயில்
தீர்த்தத் தொட்டி விருப்பாட்சி ஆறுமுக நயினார் திருக்கோயில்

சிவலிங்க பாணத்தில் ருத்ராட்ச மாலை ஆறுமுக நாயனாரின் இடது புறத்தில் காட்சியளிக்கிறார், ருத்ராட்ச சிவன். இங்குள்ள ருத்ராட்ச சிவபெருமான் குருபகவான் அம்சத்தில், சிரசில் ருத்ராட்ச மாலை அணிந்து காட்சியளிப்பது தனிச்சிறப்பு.

கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம் பெறுபவர்கள், இங்கு வியாழக்கிழமைகளில் ருத்ராட்ச சிவபெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர்.

ஆறுமுக நயினார், நாக சுப்ரமணியர், செல்வகணபதி, நாக கணபதி, ருத்ராட்ச சிவனார் ஆகிய தெய்வங்களுடன் முன்னோடி கருப்பரையும் இங்கே தரிசிக்கலாம்.

இத்தலத்தின் மகிமைகள் ஏராளம். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், பழநிக்குப் பாத யாத்திரை சென்ற பக்தர் ஒருவர் தரிசனம் முடிந்து திரும்புகையில், விருப்பாட்சி எனும் இடத்தில் கலவரம் மூண்டிருப்பதாக வழியில் எதிர்ப்பட்ட பயணிகள் மூலம் அறிந்தார். அதனால் தனது ஊருக்குச் செல்ல முடியாதோ என்று கலங்கினார்.

அப்போது, அங்கு வந்த சிறுவன் ஒருவன் வேல் ஒன்றை அவரிடம் கொடுத்து, ‘இதன் துணையுடன் ஊருக்குப் போ. உனக்கு எவ்வித தீங்கும் நேராது’ என்று கூறிச் சென்றான். சிறுவனாக வந்து வேல் கொடுத்தது சாட்சாத் அந்த முருகப்பெரு மானே என்று கருதிய பக்தரும், வேலாயுதத்தையே துணையாகக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

எந்தவித ஆபத்துமின்றி, இந்தத் தலத்தை அடைந்தார். இங்கேயிருந்த தீர்த்தத்தில் நீராட விரும்பியவர், வேலாயுதத்தை கோயிலில் வைத்துவிட்டு தீர்த்த நீராடி முருகப்பெருமானைத் தரிசித்து அருள்பெற்றார்.

தீர்த்தத் தொட்டி 'விருப்பாட்சி' ஆறுமுக நயினார் திருக்கோயில்

விருப்பாட்சி எனும் ஊரில் ஏற்பட்ட கலகத் துயரில் இருந்து பக்தனைக் காத்து தன் ஆலயத்துக்கு வரச்செய்து அருள் புரிந்ததால், இந்தத் தலம் மற்றும் முருகனின் பெயரோடு விருப்பாட்சி எனும் அடைமொழியும் சேர்ந்துகொண்டதாம். பக்தருக்கு முருகன் கொடுத்த வேலாயுதம் மயில் வாகனத்தின் அருகில் நிறுவப்பட்டிருக்கிறது.

கிழக்கு நோக்கிய சந்நிதியில் ஓராறு முகமும் ஈராறு கரங்களும் கொண்டு அழகே உருவாகக் காட்சித் தருகிறார் ஆறுமுகநயினார். இவர் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியவர் என்கிறார்கள் அன்பர்கள். பல நூற்றாண்டு காலமாக மண்ணுக்குள் புதைந்திருந்த இந்த முருகப்பெருமான், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயி ஒருவரின் கனவில் தோன்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்டாராம்.

அப்போது அந்தப் பகுதியை ஆண்ட போடி நாயக்கனூர் ஜமீன்தாரரிடமும் தெரியப்படுத்தினார் விவசாயி. விவரமறிந்த ஜமீன்தாரரும், ஊர் மக்களும் முருகப்பெருமானை அவர் கூறியதுபோன்றே கொட்டக்குடி ஆற்றங்கரையில் கண்டெடுத்தார்களாம். அப்படி அவர் வெளிப்பட்டது ஒரு சித்திரை பிறப்பு நன்னாளில்.

மேலும், கோயிலின் முன்னால் உள்ள ஊற்றானது, ஜமீன்தாரர்களின் ஆட்சிகாலத்தில் திருப்பணிகள் செய்யப்பெற்று திகழ்கிறது. தீர்த்தத் தொட்டியின் உள்பகுதியில், சப்த கன்னிமார்கள் அருளும் ஒரே கல்லால் ஆன சிலை ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தீர்த்தத் தொட்டி விருப்பாட்சி ஆறுமுக நயினார் திருக்கோயில்
தீர்த்தத் தொட்டி விருப்பாட்சி ஆறுமுக நயினார் திருக்கோயில்

முன்னொரு காலத்தில் அசுரனை வதம் செய்யச்சென்ற சப்த கன்னிமார்களில் ஒருத்தி, தவறுதலாக தவம் செய்துகொண்டிருந்த மகரிஷியை அழித்துவிட்டாளாம். இதனால் அவளை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அவள் இந்தத் திருத்தலத்துக்கு வந்து தீர்த்தம் உருவாக்கி முருகனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றதாக தலபுராணம் சொல்கிறது.

இன்றைக்கும், பக்தர்கள் இங்கு வந்து தீர்த்த நீராடி ஆறுமுகனை வழிபட்டு பிரார்த்தித்தால், துயரங்கள் தோஷங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகியோடி விடும் என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள், இப்பகுதி மக்கள்.

இந்தத் தலத்தின் ஸ்தல விருட்சம் வில்வம். சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் ஆகிய விழா வைபவங்கள் சிறப்புற நடைபெறும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை தீர்த்தத்தொட்டி சென்று முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். ஆறுமுகம் நமக்கு அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிமுளைக்கொட்டு திருவிழா! | Album

ஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக... மேலும் பார்க்க

திருச்சி, திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கோயில்: தாமரைக் குளம்... இரு வாசல்கள் கொண்ட கருவறை!

பெருமாள் கோயில்கொண்டிருக்கும் திவ்ய தேசத்தலங்களில் ஸ்ரீரங்கம் முதன்மையானது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு இணையான பெருமையும் பழைமையும் உடைய திருத்தலம் திருச்சி மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. அந்தத் தலத்தை நினைத்... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்: பதவி யோகம் கிடைக்கும்... குரு தோஷம் நீங்கும்!

முருகப்பெருமான் ஈசனை வழிபட்ட தலங்கள் அநேகம். அவை மகிமையும் பழைமையும் பெருமையும் வாய்ந்த தலங்கள். அத்தகைய தலங்களுக்குச் சென்று வழிபட்டாலே நம் வினைகள் தீரும். வேண்டும் வரம் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்க... மேலும் பார்க்க

சேலம்: காவடி பழநியாண்டவர் கோயிலில் சக்திவிகடன் நடத்தும் திருமண வரம்தரும் ஶ்ரீசுயம்வர பார்வதி ஹோமம்!

இருமணம் இணையும் திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மிகவும் முக்கியமான தருணம். காரணம் இல்லறத்தில் ஈடுபடுபவர்களே சகல அறங்களையும் செய்யத் தகுதியானவர்கள் என்கின்றன ஞான நூல்கள். அப்படிப்பட்ட திருமணம் சி... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர்: கும்பராசிக்காரர்களுக்கு வளம் தரும் திருத்தலம்!

சிவபெருமானின் 64 திருவடிவங்களில் முக்கியமானது ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சொரூபம். குருவாக அமர்ந்து மௌன உபதேசம் செய்யும் ஆலமர் செல்வனை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். சிவாலயங்களில் தட்சிணாமூர்த்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜபெருமாள்: திருமண வரம் தரும் மஞ்சள்மாலை பிரார்த்தனை!

வேள்விகள் செய்வதன் மூலம் நம் வாழ்வுக்குத் தேவையான சகலத்தையும் அதேவேளையின் பெருமாளின் அனுக்கிரகத்தையும் பெறமுடியும் என்பது நம்பிக்கை. தேவர்கள் முதல் ரிஷிகள் மன்னர்கள்வரை அனைவரும் வேள்வி செய்து இறைவனை வ... மேலும் பார்க்க