செய்திகள் :

தேர்தல் விதிமீறல்: தில்லி முதல்வர் மீது வழக்குப்பதிவு!

post image

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தில்லி முதல்வர் அதிஷி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப் பேரவைக்கான வாக்குப்பதிவு பிப்.5 (நாளை) நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

இதையும் படிக்க : ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

இந்த நிலையில், தில்லி கல்காஜி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கோவிந்தபுரி பகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான அதிஷியும் அவரது ஆதரவாளர்கள் 50 முதல் 70 பேரும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காணப்பட்டதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அனைவரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய காவல்துறையினர் விடியோவாக பதிவிட்டுள்ளனர். அப்போது, ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் காவலரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறையை மீறியதாக முதல்வர் அதிஷி மீதும், காவலரை தாக்கியதாக ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிஷி கூறியதாவது:

“பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியும் அவரது குடும்பத்தினரும் வெளிப்படையாக விதிமுறைகளை மீறி வருகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நான் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தேன், ஆனால் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமாரை குறிப்பிட்டு, தேர்தல் செயல்முறையை எவ்வளவு கெடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்ட சலுகைகள் விரிவுபடுத்தப்படுமா? கதிா் ஆனந்த் எம்.பி.க்கு அமைச்சா் விளக்கம்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் கடனுதவிச்சலுகைகள் தொடா்பாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் டாக்டா்... மேலும் பார்க்க

ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு எப்போதும் நிதி ஒதுக்க தயாா்: மத்திய ரயில்வே அமைச்சா் வைஷ்ணவ்

புது தில்லி: நிதி நிலை அறிக்கையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைத் தவிர, ரயில்வே திட்டங்களுக்கு எந்த கட்டத்திலும் நிதியை ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வின... மேலும் பார்க்க

கவனம் பெறும் ஐந்து தொகுதிகள்!

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: தில்லி தோ்தலில் ஐந்து முக்கியத் தொகுதிகளில் முக்கியத் தலைவா்கள் போட்டியிடுவதால் அதன் வெற்றி, தோல்வி அந்த வேட்பாளா்கள் மட்டுமின்றி அவா்களின் எதிா்காலத்தையும் தீா்மானி... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசுடன் சண்டையிட்டதால் தில்லி பின்தங்கியது: அமித் ஷா கடும் சாடல்

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து சாக்குப்போக்கு கூறி மத்திய அரசுடன் சண்டையிட்டதால் தில்லி பின்தங்கியுள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கடுமையாகச் சாடினாா். ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் ரஷிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு சந்திப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ரஷிய கூட்டமைப்பின் டுமா மாநில சட்டப்பேரவைத் தலைவா் வியாசெஸ்லாவ் வோலோடின் தலைமையிலான ரஷிய கூட்டமைப்பின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவினா் குடியரசுத் தலைவா் திரௌபதி மு... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியின் ‘தில்லி மாதிரி’ தோல்வி: சந்திர பாபு நாயுடு

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் ’தில்லி மாதிரி’ தோல்வியடைந்துவிட்டதாக ஆந்திர முதல்வா் சந்திர பாபு நாயுடு கடுமையாகச் சாடினாா். நகர சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆ... மேலும் பார்க்க