செய்திகள் :

தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்... விசிக-வின் கணக்கு என்ன?

post image

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொடங்கியிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது அறிவாலயம். இச்சூழலில் வி.சி.க-வின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவாக விசாரித்தோம்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை முடிவுசெய்ய பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது திராவிட முன்னேற்ற கழகம். அதன்படி பிப்ரவரி 27-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் 28-ம் தேதி காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவர்களுடன் டி.ஆர் பாலு, கே.என் நேரு தலைமையிலான குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மார்ச் 2-ம் தேதி வி.சி.க-வுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது தி.மு.க.

அண்ணா அறிவாலயம்

நம்மிடம் பேசிய வி.சி.க மாநில நிர்வாகிகள், "2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதி போட்டியிட்டோம். வி.சி.க-வின் தகுதிக்கு 6 சீட் என்பது மிக மிக குறைவுதான். ஆனாலும் கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் வந்துவிடக்கூடாது என்பதால் எங்கள் தலைவர் ஒப்புக் கொண்டார். ஆனால் மாநில கட்சியாக அங்கீகாரம்பெற்றிருக்கும் நிலையில் 12 தொகுதிகளை கேட்கவுள்ளோம்.

ஆனால் தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளுடன் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்திருப்பதால் தொகுதி பங்கீட்டில் தி.மு.க-வுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது அதனை புரிந்துகொண்டு 8 தொகுதி கொடுத்தால் ஏற்க தயாராக இருக்கிறோம்" என்றனர்.

விசிக நெப்போலியன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க மாணவரணி துணைச் செயலாளர் நெப்போலியன் "விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தி.மு.க ஒரு ராஜ்யசபா உறுப்பினர்கள் தந்தால் வரும் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எங்கள் தோழர்கள் மிகவும் உற்சாகமாக தங்களுடைய உழைப்பை இன்னும் அதிகமாக செலுத்தி திமுகவை மீண்டும் அரியணை ஏற்றுவார்கள். தி.மு.க தான் எங்கள் தலைவரை முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியது. நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியது, கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு உதவியது. இன்று ஒரு ராஜ்யசபா உறுப்பினர் முன்னை விட அதிகப்படியான சட்டசபை தொகுதிகள் தந்தால் அது தி.மு.க மீது ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் மீது நன் மதிப்பு ஏற்படும்" என்றார்.

வி.சி.க 8 சீட் கணக்கை பரிசீலிக்குமா தி.மு.க? பொருத்திருந்து பார்ப்போம்!

'சட்டமன்றத் தேர்தலை தள்ளிப்போடுங்கள்.!' - தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை!

தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் திடீரென தேர்தலை தள்ளிப்போடச் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப... மேலும் பார்க்க

`எஸ்.ஐ.ஆர் மூலம் குடியுரிமை பறிப்பு' - அகில இந்திய மக்கள் இயக்க மாநாட்டில் பரக்கல பிரபாகர் ஆவேசம்!

சென்னை தி.நகரிலுள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் அகில இந்திய மக்கள் இயக்கம் சார்பில் 'வஞ்சிக்கப்படும் தென்னிந்தியா, பழிவாங்கப்படும் தமிழ்நாடு' என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கருத்தரங்கம் நடை... மேலும் பார்க்க

`இந்த வீட்டு வாசல்ல அம்மா கார் டயருக்கு வணக்கம் வச்சவங்கதானே; இங்க வர்றதுக்கு என்ன?' – ஜெ.தீபா

மறைந்த முன்னாள் முதல்வரும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று அக்கட்சியின் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது.ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் வீட்டில் தற்போது வசித்து வ... மேலும் பார்க்க

ம.நடராஜனின் சகோதரர் மரணம் - கட்சியின் பெயரை வி.கே.சசிகலா அறிவிக்காததற்கு காரணம் இதுவா?

வி.கே. சசிகலாவின் கணவர் மறைந்த ம.நடராஜனின் மூத்த சகோதரர் ம. சாமிநாதன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.ராமநாதரபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நேற்று புதிய கட்சி தொடங்கும் முடிவை அறிவித்தார் வி.கே சசிகல... மேலும் பார்க்க

PEN ரிபோர்ட்; உதயநிதியின் கிரீன் சிக்னல்; உற்சாகத்தில் உடுமலை இளைஞரணி - திடீர் விசிட் பின்னணி!

திருப்பூர் மாவட்டத்தில் விஐபி தொகுதியாக கருதப்படும் உடுமலைப்பேட்டைதான் இப்போது, மாவட்ட திமுக-வுக்குள் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.1996-க்குப் பிறகான 25 ஆண்டுகளில், இந்த தொகுதியில் நடைபெற்ற 5 ... மேலும் பார்க்க

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைப்பு; ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன.... மேலும் பார்க்க