“கேரளாவில் இருப்பதால் உயிரோடு இருக்கிறோம்” - மோனாலிசா வழக்கில் உயர் நீதிமன்றத்தி...
'தோழியை சந்திக்க வந்த இடத்தில்.!' கோயம்பேடு தனியார் பார் தகராறு; மற்றொரு பெண்ணும் உயிரிழப்பு
கடந்த மே 31-ம் தேதி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில், நடனமாடும் போது இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் மற்றும் அவரது தோழிகளுக்கும், சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அதனால், அந்த இரு குழுக்களையும் பவுன்சர்கள் வெளியேற்றியுள்ளனர். பாருக்கு வெளியேயும் அந்தப் பிரச்னை தொடர, அங்கிருந்தும் அந்த இரு குழுக்களையும் பவுன்சர்கள் அனுப்பியிருக்கின்றனர்.
ஆனால், போகும் வழியில், பைக்கில் சென்றுகொண்டிருந்த இளம் பெண் மற்றும் அவரது தோழியை சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களும் காரில் மோதியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார் 18 வயதான இளம் பெண் யான்சி. யான்சி உடன் பைக்கில் சென்ற தோழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், அவரும் சிகிச்சைக்குப் பலனளிக்காமல் இறந்துவிட்டார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேரை காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த யான்சிக்கு வயது 18. அவரின் தோழிக்கு வயது 17.
விழுப்புரத்தில் உள்ள அனிச்சங்குப்பம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் யான்சி. இவருக்கும், 17 வயதான சிறுமிக்கும் சில மாதங்களுக்கு முன்பு தான் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை சந்திக்க யான்சி வந்த இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.


















