செய்திகள் :

கல்லூரியில் பூட்டியிருந்த அறையில் கிடந்த 2 சூட்கேஸ்களில் கரையான் அரித்த 1 கோடி ரூபாய் நோட்டுக்கள்!

post image

கொல்கத்தாவின் மத்திய பகுதியில் செயல்படும் சுரேந்திரநாத் கல்லூரியில் பூட்டப்பட்டு இருந்த ஒரு அறையை திறந்து ஊழியர்கள் சுத்தப்படுத்தியபோது, உள்ளே இரண்டு சூட்கேஸ்கள் இருந்தது. அந்த சூட்கேஸ்களை திறந்து பார்த்தபோது ஊழியர்கள் அதிர்ச்சியடைதுவிட்டனர்.

உள்ளே 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் பண்டல், பண்டலாக இருந்தது. ஆனால் அனைத்தும் கரையான் அரித்த நிலையில் மிகவும் மோசமாக சேதம் அடைந்த நிலையில் பயன்படுத்த முடியாதபடி இருந்தது. அது மொத்தம் ஒரு கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு பெரிய தொகையை யார் கல்லூரி வளாகத்திற்குள் கொண்டு வந்து பதுக்கி வைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

பணம் இருந்த அறையை கல்லூரி தொழிற்சங்க அலுவலகமாக நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்தனர். அதன் பிறகு பல ஆண்டுகளாக அந்த அறை மூடப்பட்டு இருந்தது. விரைவில் பருவமழை தொடங்கும் என்பதால் மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால், ஊழியர்கள் கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்தினர்.

அப்போது நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு இருந்த அறையை திறந்து சுத்தம் செய்தபோது உள்ளே இருந்த அலமாரியில் இரண்டு பழைய சூட்கேஸ்கள் இருந்தது.

இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அதோடு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் முன்னிலையில் சூட்கேஸ்கள் திறக்கப்பட்டது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கல்லூரி அதிகாரிகளின் முன்னிலையில் சூட்கேஸ்கள் திறக்கப்பட்டபோது, ​​அவற்றுக்குள் கரையன்களால் சேதமடைந்த பணக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

அந்தப் பணத்தாள்கள் பழமையானவையாகவும், மிகவும் மோசமாகச் சிதைந்த நிலையிலும் காணப்பட்டன. மீட்கப்பட்ட பணத்தின் துல்லியமான அளவு எவ்வளவு என்பதையும், அந்தப் பெட்டிகள் எவ்வளவு காலமாக அங்கு கிடந்தன என்பதையும் கண்டறிய நாங்கள் முயன்று வருகிறோம். மேலும், அந்த அறைக்குள் நுழைய யாருக்கெல்லாம் அனுமதி இருந்தது என்பதையும், அந்தப் பணம் எவ்வாறு அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்பதையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்," என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

அந்த பணத்தை யார்வைத்தது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இவ்வளவு அதிகமான தொகை எப்படி யாருக்கும் தெரியாமல் கல்லூரி வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது என்று கேள்வி எழுப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ.சஜல் கோஷ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியின் தொழிற்சங்கத்திற்கு இதில் தொடர்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா: 55 லட்சம் விவசாயிகளின் விவசாயக் கடன் தள்ளுபடி; யார், யாருக்கு எவ்வளவு?

கடந்த 2024ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று கூறி பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

இலவச மாம்பழ விருந்து: அமெரிக்கப் பூங்காவைத் திருவிழாக்கோலமாக்கிய அசல் இந்திய மாம்பழங்கள்!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பூங்கா ஒன்றில், இந்திய மாம்பழங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு பிரமாண்டமான "இலவச மாம்பழத் திருவிழா" அங்கிருந்த மக்களை ஒட்டுமொத்தமாகக் கவர்ந்து தற்போது இணையத்தில் பயங்கர வைரலாக... மேலும் பார்க்க

MacBook-க்காக இளைஞர் போட்ட ஸ்கெட்ச்; பணியில் சேர்ந்தவுடன் Uber நிறுவனத்துக்குக் காத்திருந்த ஷாக்!

ஊழியர்கள் வேலைக்கு வராமல் ஏமாற்றுவதை நாம் பார்த்திருப்போம், ஆனால் ஒரு லேப்டாப்பிற்காக ஒரு நபர் தனது அடையாளத்தையே ஒட்டுமொத்தமாக அழித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த இந்த விசித்திரச் சம்பவம் தற்போது பயங்கர வை... மேலும் பார்க்க

`சுஷ்மிதா என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்தார்; அதுவொரு சிறப்பான உறவு'- மனம் திறந்த லலித் மோடி

நடிகை சுஷ்மிதா சென் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியைக் காதலிப்பதாகச் செய்தி வெளியானது. இருவரும் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்ற புகைப்படங்களை லலித் மோடி தனது சமூக... மேலும் பார்க்க

இன்ஸ்டா நட்பு; தன்பாலின உறவு - திருமணத்திற்கு மறுத்த பார்ட்னரை கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபர்

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள நாகபள்ளி என்ற இடத்தை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சூரஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி ... மேலும் பார்க்க