செய்திகள் :

'நாங்கதான் ஒரிஜினல் அதிமுக!' - சபாநாயகரிடம் மீண்டும் முறையிட்ட அதிமுக-வின் கோஷ்டிகள்!

post image

அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி இரண்டாக பிளவு பட்டு நிற்கும் நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் இரு கோஷ்டியினரும் சபாநாயகரை சந்தித்து 'நாங்கள்தான் ஒரிஜினல் அதிமுகவினர்!' என உரிமை கோரியிருக்கின்றனர்.

EPS Faction
EPS Faction

தவெகவுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து மோதலில் அதிமுக எடப்பாடி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாக பிளவு பட்டிருக்கிறது. நேற்று சட்டமன்றத்தில் நடந்த தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிலும், எடப்பாடி ஆதரவாளர்களான 22 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராகவும் சி.வி.சண்முகம் தரப்பின் 25 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர்.

சட்டமன்றத்திலேயே இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருந்தது. இதைத்தொடர்ந்து தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், 'திமுக ஆதரவுடன் எடப்பாடி முதல்வராக முயற்சி செய்தார்' எனக் கடுமையாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார். அவர்களின் இடங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்தார்.

CV சண்முகம்
CV சண்முகம்

இதைத்தொடர்ந்து அதிமுகவின் இருபிரிவினரும் இன்று சபாநாயகரை சந்திக்க தலைமைச் செயலகம் வந்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் ஆகியோரும் சி.வி.சண்முகம் அணி சார்பில் சி.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, கே.பி.அன்பழகன் போன்றோர் சபாநாயகரை சந்திக்க வந்திருந்தனர். அதிக எம்.எல்.ஏக்களின் ஆதரவு எங்களுக்குதான் இருக்கிறது என்பதால் எங்களை அதிமுகவாக அறிவிக்க வேண்டும் என சி.வி.சண்முகம் தரப்பு கோரியிருக்கிறது. 'கட்சியில் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே இருக்கிறது. எனவே பொதுச்செயலாளர் நியமிப்பவரையே கொறடாவாக ஏற்க வேண்டும்' என்றும் கோரியிருக்கின்றனர்.

`விஜய் என்னை காப்பாற்றாமல் விடுவாரா?' - எஸ்.காமராஜின் சட்டமன்ற பல்டியும் பின்னணியும்!

சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகி த.வெ.க தலைமையில் மே 10-ம் தேதி ஆட்சியும் அமைந்துவிட்டது. ஆனால், முடிவு வெளியான அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் தமிழக அரசியல் களம் அதகளம் ரணகளம்தான். அதில் உச்சகட்டமாக ப... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: "ரூ.2500-னு சொல்லிட்டு ரூ.1000கூட தராம இழுத்தடிக்கிறது..."- ஸ்டாலின் கண்டனம்

2021-2026 தி.மு.க ஆட்சிக் காலத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 அவர்களது வங்கித் தொகையில் நேரடியாக வரவ... மேலும் பார்க்க

`மிரட்டிய எடப்பாடி; தனித்துச் சென்ற வேலுமணி டு லிஸ்ட் எடுக்கும் உதயநிதி.!' | கழுகார் அப்டேட்ஸ்

தனித்துச் சென்ற வேலுமணி!""மிரட்டிய எடப்பாடி...அ.தி.மு.க-வில், வேலுமணி தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு நெருக்கமானவரான சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டட தொழிலதிபர் வழிய... மேலும் பார்க்க

"அந்த சோஃபா ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட ஒன்று!" - உதயநிதி விமர்சனம் குறித்து திருமா

த.வெ.க தரப்பில் சோஃபா செல்கிறது. அதன்பிறகு முதல்வரும் செல்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 'புஷ்பா' படத்தைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்க... மேலும் பார்க்க

திமுக: ``தோல்விக்கு நானே பொறுப்பு; சுனாமி பேரழிவு இது; மிகப்பெரிய மாற்றத்தை.!" - ஸ்டாலின் முழு உரை

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருப... மேலும் பார்க்க

கேரள முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன் தேர்வு; 10 நாள்கள் இழுபறி முடிவுக்கு வந்தது!

கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களிலும், சி.பி.எம் கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜ.க 3 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சி அமைக்க 71 எ... மேலும் பார்க்க