Karuppu Release: "இது நடந்திருக்கக்கூடாது; நானும் இதை எதிர்பார்க்கல!" - கண்கலங்க...
"மகளிர் உரிமைத்தொகை விரைவில் நேரடியாக வரவு; மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவை" - தமிழ்நாடு அரசு
2021 டு 2026 திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. தகுதியுள்ள மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைப்பதே இந்தத் திட்டம்.
தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் இந்தத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தது.
இப்போது மகளிர் உரிமைத்தொகை குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது...
"மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் -மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்".



.jpeg)









