செய்திகள் :

கேரள முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன் தேர்வு; 10 நாள்கள் இழுபறி முடிவுக்கு வந்தது!

post image

கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களிலும், சி.பி.எம் கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜ.க 3 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சி அமைக்க 71 எம்.எல்.ஏ-க்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி கூடுதல் இடங்களை வென்று பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் முதல்வராக யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது. கட்சியில் சீனியரான கேரள சட்டசபை எதிர்க்கட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் சென்னிதலா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆகிய மூவரும் முதல்வர் ரேசில் இருந்தனர். கேரளத்தின் தற்போதைய சட்டசபை மே 23-ம் தேதிதான் முடிவடைகிறது என்பதால் முதல்வர் வேட்பாளரை தேர்வுசெய்ய காங்கிரஸுக்கு கால அவகாசம் நிறைய இருந்தது. ஆனால், கே.சி.வேணுகோபால் ஆதரவாளர்கள், வி.டி.சதீசன் ஆதரவாளர்கள் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆதரவாளர்களும் பிளக்ஸ் போர்டுகள் வைப்பது, ரோட்டில் இறங்கி போராட்டங்கள் நடத்துவது என கேரளத்தை அதகளப்படுத்திவிட்டனர்.

ரமேஷ் சென்னிதலா, வி.டி.சதீசன், கே.சி.வேணுகோபால்

கே.சி.வேணுகோபால் முதல்வர் ஆகவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வைத்த போர்டுகளை, வி.டி.சதீசன் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர். கடுதுருத்தி பகுதியில் வி.டி.சதீசன் ஆதரவாளர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றது அரசியலை பரபரப்பாக்கியது. தலைவர்கள் டெல்லிக்கு சென்றுவருவதும், டெல்லி தலைவர்கள் கேரளத்துக்கு வந்து ஆலோசனை நடத்துவதும் தொடர்ந்தது. 10 நாள்கள் விவாதத்துக்குப் பின் இன்று கேரள முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன் பெயரை கட்சி தலைமை அறிவித்துள்ளது.

கேரள முதல்வர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட வி.டி சதீசன்

புதிய முதல்வர் வி.டி.சதீசனுக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.சி.வேணுகோபால் கூறுகையில், "கேரள முதல்வர் குறித்து கட்சியின் ஹை கமாண்ட் தீர்மானம் எடுக்கும் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஹை கமாண்ட் முடிவை ஏற்றுக்கொண்டு வி.டி.சதீசனுக்கு எல்லாவிதத்திலும் ஆதரவாக இருப்போம்" என்றார்.

`மிரட்டிய எடப்பாடி; தனித்துச் சென்ற வேலுமணி டு லிஸ்ட் எடுக்கும் உதயநிதி.!' | கழுகார் அப்டேட்ஸ்

தனித்துச் சென்ற வேலுமணி!""மிரட்டிய எடப்பாடி...அ.தி.மு.க-வில், வேலுமணி தலைமையில் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் அணிவகுத்துள்ளனர். அமித் ஷாவுக்கு நெருக்கமானவரான சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டட தொழிலதிபர் வழிய... மேலும் பார்க்க

"அந்த சோஃபா ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட ஒன்று!" - உதயநிதி விமர்சனம் குறித்து திருமா

த.வெ.க தரப்பில் சோஃபா செல்கிறது. அதன்பிறகு முதல்வரும் செல்கிறார் என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் 'புஷ்பா' படத்தைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்க... மேலும் பார்க்க

திமுக: ``தோல்விக்கு நானே பொறுப்பு; சுனாமி பேரழிவு இது; மிகப்பெரிய மாற்றத்தை.!" - ஸ்டாலின் முழு உரை

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருப... மேலும் பார்க்க

"மகளிர் உரிமைத்தொகை விரைவில் நேரடியாக வரவு; மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவை" - தமிழ்நாடு அரசு

2021 டு 2026 திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. தகுதியுள்ள மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைப்பதே இந்தத் திட்டம். தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில... மேலும் பார்க்க

'நாங்கதான் ஒரிஜினல் அதிமுக!' - சபாநாயகரிடம் மீண்டும் முறையிட்ட அதிமுக-வின் கோஷ்டிகள்!

அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி இரண்டாக பிளவு பட்டு நிற்கும் நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் இரு கோஷ்டியினரும் சபாநாயகரை சந்தித்து 'நாங்கள்தான் ஒரிஜினல் அதிமுகவினர்!' என உர... மேலும் பார்க்க

தொடரும் முந்தைய அரசின் திட்டங்கள்; புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் ரூ.1000 வரவு வைப்பு - TN Live Updates

தொடரும் முந்தைய அரசின் திட்டங்கள்; புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் கீழ் ரூ.1000 வரவு வைப்பு!விஜய்புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, மாதந்த... மேலும் பார்க்க