‘தொழிலை மீட்க உதவி செய்யுங்கள்’ - அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஜப்பான் நபரின் வேண்டு...
நிறுத்தப்பட்ட சட்டமன்ற ஒளிபரப்பு: "முழு நேரலை..முழு நேரலை...அத்தனையும் உருட்டா சார்! - அதிமுக கேள்வி
தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் இன்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்து பதிவிட்டிருக்கிறது. "முழு நேரலை.. முழு நேரலை... அத்தனையும் உருட்டா சார்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம். எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்!" என்று பதிவிட்டிருக்கிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சட்டப்பேரவை நேரலை மீண்டும் தொடரும் என்று உறுதியளித்திருந்தார்.

முதல்வர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டார் என்று அமைச்சர்கள் பெருமிதம் தெரிவித்த அடுத்த நாளே, விவாதம் தொடங்கியவுடன் நேரலை நிறுத்தப்பட்டுள்ள சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சட்டப்பேரவை நேரலை நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.














