பாஜக: ``எனக்கும் கேசவ விநாயகத்துக்கும் என்ன கருத்துவேறுபாடு?" - அண்ணாமலை ஒப்பன் ...
நிலவில் இடம் பிடித்தது இஸ்ரோ! - சந்திரயான் 4 தடம் பதிக்கப்போகும் 'அந்த' ரகசிய இடம் எது?
சந்திரயான் 3 லேண்டரை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி, நிலவின் தென்பகுதியை துல்லியமாக படம்பிடித்து பூமிக்கு அனுப்பியதை தொடர்ந்து, நிலவில் உள்ள மண் போன்றவற்றை எடுத்து வருவதற்காக அடுத்த கட்ட நடவடிக்கையாக இஸ்ரோ சந்திரயான் 4-ஐ நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
சந்திரயான் 4 நிலவுக்கு அனுப்பப்பட்டு, நிலவின் மாதிரிகளை சேகரித்து அதை பூமிக்கு அனுப்பும் இந்தத் திட்டம் குறைந்தபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2028-ல்தான் தொடங்கப்படவுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் முன்பு கூறியிருந்தார்.
இருப்பினும், இந்த சவாலான செயல்பாட்டின் முதல் கட்டமாக நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டரை தரையிறக்குவதற்காக நான்கு இடங்களைத் தேர்வு செய்திருந்தனர்.

அதில் ஓர் இடத்தை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியை மாலபெர்ட் மௌண்டன் (MM) என்று குறிப்பிடுவார்கள்.
இதில் MM 1, MM 3, MM 4 மற்றும் MM 5 என நான்கு இடங்களைக் கண்டறிந்துள்ளோம். MM 4-ஐ சந்திரயான் 4-ன் லேண்டர் தரையிறங்குவதற்கான இடமாக அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த MM 4-ஐ சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சதுர பரப்பளவில் ஆபத்து சதவிகிதம் குறைவாக இருப்பதும், அதிக அளவில் ஆபத்து இல்லாத பகுதி என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே MM 4 சந்திரயான் 4 திட்டத்திற்கான சாத்தியமான இடமாக கருதப்படலாம் என்றும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















