செய்திகள் :

"நீங்கள் தாக்கினால், உங்களுக்கும் திருப்பி அடி விழும்" - அமெரிக்காவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

post image

ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது.

ஈரானின் சபஹார் துறைமுகம், இரான்ஷார் விமான நிலையம் எனத் தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கெல்லாம் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. பஹ்ரைன் உள்ளிட்ட மத்தியக் கிழக்கு பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது ஈரான்.

மேலும், ஈரான் தரப்பில் இருந்து அமெரிக்காவிற்கு விடப்பட்ட எச்சரிக்கைகள்...

அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப்:

"மிரட்டுவதற்கும் கொடுத்த வாக்கை மீறுவதற்கும் இனிமேல் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தப்பித்துவிட முடியாது என்பதை அமெரிக்கா இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. நான் இன்னும் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்கிறேன் - நீங்கள் தாக்கினால், உங்களுக்கும் திருப்பி அடி விழும்.

காலிபாஃப்
காலிபாஃப்

வீணாக அடித்துக் கொண்டு அலைவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் இன்னும் ஆழமான சேற்றில் மூழ்கிவிடுவீர்கள்.

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்காது. அது 'ஈரானின் முடிவுகளுக்கு' ஏற்ப மட்டுமே திறக்கும்."

ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணை அமைச்சர் கரிபாபாதி:

"ஈரானிய தேசத்தை அவமதிப்பதில் இருந்து, கூடுதல் தாக்குதல்களை நடத்துவோம் என அச்சுறுத்துவது வரை இன்று ட்ரம்ப் வெளியிட்டிருக்கும் அறிக்கைகள் ஒன்றும் அவரது வலிமையின் அடையாளம் அல்ல.

மாறாக, பல ஆண்டுகளாகப் பிரயோகிக்கப்பட்ட கொடூரமான படைபலம், பொருளாதாரத் தடைகள் மற்றும் மிரட்டல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு கொள்கையின் தோல்வியடைந்தது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமே இதுவாகும்.

இவற்றை ஈரானிய தேசத்தை ஒருபோதும் மண்டியிட வைக்க முடியவில்லை.

குற்றவாளியாகவும் கொலையாளியாகவும் இருக்கும் இந்த ட்ரம்பிடம், அவருக்குப் புரியும் மொழியிலேயே பேச வேண்டும். வெளிப்படையாகச் சொன்னால், பலவந்தத்தின் மொழியைத்தான் அவர் நன்றாகப் புரிந்துகொள்கிறார் போலிருக்கிறது!"

"திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் அரசுப்பணி கிடைக்குமென்றால்.?" - சீமான்

நாளை கரூர் செல்லும் முதல்வர் விஜய் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கரூர் சம்பவத்தா... மேலும் பார்க்க

'காவல்துறை பாஜக தொண்டர்களைப் போல.!' - சொந்த கட்சி தொண்டரை அறைந்த மம்தா பானர்ஜி - என்ன நடந்தது?

நேற்று (ஜூலை 8, 2026), மேற்கு வங்கம் பாருய்பூரில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திரிணாமும் காங்கிரஸ் பேரணி நடத்தியது. அந்தப் போராட்டத்தைத் தடுக்... மேலும் பார்க்க

கரூர் விசிட் : 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் விஜய்!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தவெக தலைவர் விஜய் கரூர் சென்றிருந்தார். அப்போது அதிகளவு மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

ஈரான் துறைமுகம், விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 'ட்ரம்ப் உத்தரவின் பேரில்' என விளக்கம்

அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் 17-ம் தேதி கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின், அவ்வப்போது தாக்குதல் நடந்தாலும், தற்போது முழு நேர போர் தொடங்கியுள்ளது. துரு... மேலும் பார்க்க

30 ஆண்டுகளில் 325 மில்லியன் டாலர் லஞ்சம்: சீனாவில் முன்னாள் அரசு அதிகாரிக்கு மரண தண்டனை!

சீனாவில் லஞ்சம் பெற்ற முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது, அந்த நாட்டு நீதிமன்றம்.நான்ஜிங் நகரின் பொருளாதார மேம்பாட்டு மண்டலத்தின் முன்னாள் துணை இயக்குநர் யாங் யூலின். இவர் 1993-... மேலும் பார்க்க