செய்திகள் :

நீட் தேர்வு எழுதக் கட்டாயப்படுத்திய தந்தை; கொன்று உடலைத் துண்டுத் துண்டாக்கிய மகன் சிக்கியது எப்படி?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மன்வேந்திர சிங் (49). தொழிலதிபரான இவரது மகன் அக்‌ஷத் பிரதாப் சிங்(21). மன்வேந்திர சிங் தனது மகனிடம் மருத்துவம் படிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்காக நீட் தேர்வு எழுதும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அக்‌ஷத் சிங்கிற்கு மருத்துவம் படிக்க விரும்பவில்லை. இதனால் அடிக்கடி தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

ஒரு முறை இவ்விவகாரத்தில் அக்‌ஷத் சிங் வீட்டை விட்டு வெளியேறினார். இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென மன்வேந்திர சிங் காணாமல் போனார். இது குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர். இதற்காக போலீஸார் மன்வேந்திர சிங் வீட்டிற்குச் சென்று அவரது மகனிடம் விசாரித்தனர்.

மன்வேந்திர சிங்
மன்வேந்திர சிங்

வீட்டில் சோதித்துப் பார்த்தபோது அங்கு இருந்த ஊதா கலர் டிரம்மில் மனித உடல் உறுப்புகள் இருந்தன. இது குறித்து அக்ஷத் சிங்கிடம் விசாரித்தபோது தனது தந்தயைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ''மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக தந்தை மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அக்ஷத் சிங் தனது தந்தையைச் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

உடலை மூன்றாவது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு அக்ஷத் சிங் கொண்டு வந்தார். அப்போது அக்ஷத் சிங் சகோதரி இதனைப் பார்த்துவிட்டார். உடனே அவரை மிரட்டி அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார்.

தனது சகோதரி கண் முன்னிலையில் தனது தந்தையின் உடலைப் பல துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பேக்கில் அடைத்து அதனை சதுரனா என்ற இடத்தில் கொண்டு போய் போட்டார். உடலின் சில பகுதிகள் இருந்தன. அதனை வீட்டில் இருந்த ஊதா கலர் டிரம்மில் போட்டு அதனை வீட்டிற்குப் பின்னால் வைத்துள்ளார்'' என்றார்.

போலீஸார் உடலின் எஞ்சிய பகுதியைத் தேடி வருகின்றனர். அக்ஷத் சிங்கைக் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

எல் மென்ச்சோ: `காதலால் வீழ்ந்த மெக்சிக்கோ போதைப் பொருள் கடத்தல் மன்னன்' - காட்டிக்கொடுத்த காதலி

மெக்சிக்கோவில் அமெரிக்காவில் தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்ச்சோ இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் வன்... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு; பத்திரப்பதிவு எழுத்தர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட பயங்கரம்!

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள ஆணையப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர், மூலைக்கரைப்பட்டியில் பத்திரம் எழுதும் அலுவலகம் நடத்தி வந்தார். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளைப... மேலும் பார்க்க

ஒரு தலை காதல்; வீடு புகுந்து இரட்டை கொலை செய்த இளைஞர் - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம், நெகமம் அருகே உள்ளகொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக் வேலை செய்கிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவியும்,18 வயது மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மாணவரை சாதி ரீதியாக தாக்கிய 5 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், முதலூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி ... மேலும் பார்க்க

கூல்டிரிங்க்ஸ் குடிப்பது போல் வந்து குழந்தையை கடத்திச் சென்ற தம்பதி - 20 நிமிடங்களில் மீட்ட போலீஸார்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி, முத்துச்செல்வி. இத்தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வருகின்றனர்.... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: 'கட்டாயத் திருமணம்?' - ஒரே நாளில் திருமணம் செய்யவிருந்த சகோதரிகள் தற்கொலை; பின்னணி என்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் தீப் சிங். இவரின் மகள்கள் ஷோபா(25) மற்றும் விம்லா(23). இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே நாளில் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து கொண்டி... மேலும் பார்க்க