செய்திகள் :

நீலகிரி: பாரம்பரிய முறைப்படி விமர்சையாக நடந்த பொக்காபுர மாரியம்மன் கோயில் திருவிழா!

post image

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளுக்குட்பட்ட மசனக்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காபுரம் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்திலிருக்கும் பொக்காபுர மாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது.

இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளிருந்து மக்கள் வருகை தருகின்றனர்.

நான்கு நாட்களாக நடைபெறும் திருவிழாவில், முதல்நாள் நிகழ்வாக அதிகாலை 5 மணிக்கு காப்புக்கட்டுகிறார்கள். காப்புக் கட்டின் போது பொக்காபுர மாரியம்மனை குளத்திற்கு எடுத்துச் சென்று, அம்மனை நீராட வைத்து, அலங்காரம் செய்து கோவிலுக்கு எடுத்து வந்து வழிபடுகின்றனர்.

இதில் பொக்காபுர மாரியம்மன் திருவிழாவினை நடத்தும் பழங்குடியின மக்கள் தவிர மற்றொரு பழங்குடியின மக்கள் காம்பெட்ரா ஐயன் ஆலையத்திலிருந்து வந்து பூஜை செய்து அம்மனை பெட்டியில் வைத்து குளத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்.

அதன்பின் திருவிழா நடத்தும் பழங்குடியின சமூகத்தினர் வாயில் வேப்பிலையை வைத்து பெட்டியில் இருக்கும் அம்மனை குளத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் காட்டுப்பாதையின் வழி குளத்திற்கு அம்மனை எடுத்துச் செல்லும் போது அவர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற ஆடைகளை அணிந்து பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து பாட்டுப்பாடிக்கொண்டே அம்மனை குளத்திற்கு எடுத்து சென்றனர்.

அங்கு அம்மனை நீராட்டிவிட்டு அம்மனுடைய ஆலையத்திற்கு கொண்டு சென்று பூஜை செய்தனர். பொக்காபுர அம்மனை தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் வந்து மக்கள் வழிபடுகின்றனர். இங்கு பக்தர்கள் கோவிலுக்கு வேண்டுதலாக கோவிலைச் சுற்றி குட்டி குட்டி கல்லில் அம்மனை ஜோடித்து தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

திருவிழாவிற்கு கடைகள் போட்டிருக்கும் வியாபாரிகள் ' பொக்காபுர அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன். அம்மனிடம் எது வேண்டிக்கொண்டாலும் நிச்சயம் நடக்கும் என்றார்கள். கோவிலைச் சுற்றுலும் காடுகளாகத்தான் இருக்கிறது. இங்கு அதிகமாக கரடி, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருந்தாலும் பொக்காபுர திருவிழாவின் போது கோவிலுக்கு காப்பு கட்டிவிட்டால் எந்த விலங்கும் எங்களை தொந்தரவு செய்யாது. திருவிழா முடியும் வரை நாங்கள் இங்கே தான் தங்கியிருப்போம் என பக்தர்கள் கூறுகின்றனர்.

'கருவூர் சித்தரை தரிசிக்க வந்தோம்!' - பக்தி மார்க்கமாக கரூர் வருகைதந்த 50 ஜப்பானியர்கள்

கரூர் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற தலங்களில் முதன்மையான திருத்தலம் இது. கருவூர் சித்தர் அவதரித்த ஊர் என்பதால் இங்... மேலும் பார்க்க

`பசில வந்த பிள்ளைக.!' - தாயே வண்டி மலைச்சியா, வண்டிமலையான்... நீங்கதான் துணை' | ஆங்காரிகளின் கதை 5

வண்டிமலையான்ஆங்காரிகளின் கதை 05நாட்டார் தெய்வங்கள் யாவும் புராணங்கதைகள் வழியாக திடீரென உருவாகி வழிபடப்படுபவை அல்ல. சமூக மற்றும் சாதிய அதிகாரங்களுக்கு எதிராக சமரிட்டு பலியான மனிதர்களின் ரெத்த சாட்சியங்... மேலும் பார்க்க

`ஒத்த தங்கைய ஈட்டியால கொல்லுறீங்களே...' ஆணவக்கொலை செய்யப்பட்ட பூச்சியம்மனின் கதை |ஆங்காரிகளின் கதை 4

பூச்சியம்மனின் கதைஆங்காரிகளின் கதை 4“ வலுத்திலுத்தும் தங்கையவள் வர மாட்டேனென்றதினால் கழுத்தறுத்து வெட்டினார்கள் காரிகையை அன்னேரம். வெட்டுப்பட்ட அவள்தலைதான் வேகமாக உருண்டைதையா!…” - பூச்சியம்மன் வில்லுப... மேலும் பார்க்க

கேரளா: 'உலகில் மிக உயரமான கண்ணகி சிலை' - ஆற்றுகால் பகவதி கோயிலில் ரூ.3.5 கோடியில் அமைக்கத் திட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் பெண்களின் காவல் தெய்வம் எனப் போற்றப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடக்கும் பொங்காலை வழிபாட்டி... மேலும் பார்க்க

தைப்பூசம்: 'வேலும் மயிலும் பறபறக்க' - மருதமலை முருகன் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் | Photo Album

தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா? மேலும் பார்க்க

வடலூர்: வள்ளலார் 155வது ஜோதி தரிசன விழா | Photo Album

வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழாவள்ளலார்... மேலும் பார்க்க