செய்திகள் :

'நீ நல்லா சாப்பிட்டிருக்க' - புகார் செய்த பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன்

post image

பக்ரீத் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து வசதிகளை ஆய்வு செய்ய சென்றிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் பயணிகளிடம் நிலைமை புரியாமல் அடாவடியாக பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

சேலம் பார்த்திபன்
சேலம் பார்த்திபன்

போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன் நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ஆய்வு செய்வதற்காக வந்திருந்தார். முறையான பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த பயணிகள், போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் தங்களின் குறைகளை கூறினர். அப்போது ஒரு சில பயணிகளிடம் அமைச்சர் பார்த்திபன் அடாவடியாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இளைஞர் ஒருவர் தான் முன்பதிவு செய்திருந்த பேருந்து நேரம் கடந்தும் இன்னும் வரவில்லை என அமைச்சரிடம் கூறினார். அதற்கு உரிய பதிலை சொல்லாத அமைச்சர் பார்த்திபன் அந்த இளைஞரை நோக்கி, 'நீ நல்லா சாப்பிட்டிருக்க...நான் இன்னும் சாப்பிடல...நீ நல்லா சாப்பிட்டிருக்க நான் இன்னும் சாப்பிடல...' என எரிச்சலூட்டும் தொனியில் பேசியிருந்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த இளைஞர், '10:45 மணி பேருந்தில் நான் டிக்கெட் புக் செய்திருந்தேன். 11:30 மணியை தாண்டியும் பேருந்து இன்னும் வரவில்லை. அதிகாரிகள் முறையாக பதில் சொல்லவில்லை. அமைச்சரிடம் கேட்டால் சம்பந்தமே இல்லாமல் 'நீ நல்லா சாப்பிட்டிருக்க' என்கிறார். சாப்பிட்டுவிட்டு வருவதும் சாப்பிடாமல் வருவதும் என்னுடைய விருப்பம். இதெல்லாம் ஒரு பதிலா?' என அதிருப்தியாக கூறினார்.

பயணியிடம் வாதிட்ட அமைச்சர்
பயணியிடம் வாதிட்ட அமைச்சர்

அதேமாதிரி, நகருக்குள் இருந்து கிளாம்பாக்கத்துக்கு முறையாக பேருந்து இல்லை எனக் கூறிய பயணியிடமும் நீண்ட நேரமாக அவர் சொல்வதை சரியாக புரிந்து கொள்ளாமல் வாதம் செய்து கொண்டிருந்தார். இது போன்று பேசிவிட்டு கடைசியில், 'குறைகள் இருந்தால் சொல்லுங்கள். நிறைகள் ஆக்கிக் கொள்கிறோம்' எனக் கூறியிருக்கிறார்.

கிளாம்பாக்கத்தில் தன்னுடைய முதல் ஆய்விலேயே அமைச்சர் பயணிகளிடம் பேசிய விதம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

கும்பகோணம்: ஃப்ளக்ஸ் வைப்பதில் வாக்குவாதம் - தவெகவினர் தாக்கியதில் காவலருக்கு கையில் எலும்பு முறிவு!

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண், காளி. இருவரும் தவெக-வில் வார்டு உறுப்பினர்களாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கும்பகோணத்தில் வெற்றி பெற்ற வினோத் அமைச்சராகியிருக்கிறார். இதையடுத்து அமைச்சர் வின... மேலும் பார்க்க

ஹார்முஸ் நீர்சந்தி: ஈரான், ஓமன் கன்ட்ரோலுக்கு செல்லுமா? சுங்க வரி வசூலா? - ட்ரம்ப் பதில்

ஈரானுக்கு வடக்கேயும், ஓமனுக்கு தெற்கேயும் அமைந்திருக்கிறது ஹார்முஸ் நீர்சந்தி. ஆனால், இந்த நீர்சந்தியில் தற்போது ஈரானின் கை ஓங்கியிருப்பதால் தான், ஹார்முஸ் நீர்சந்தியை முழுவதுமாக மூடியிருக்கிறது ஈரான்... மேலும் பார்க்க

ரூ.2 கோடி; சாக்கு மூட்டையில் கட்டி மண்ணில் புதைத்து வைத்திருந்த திரிணாமுல் கட்சி நகராட்சி தலைவர்!

மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து மம்தா பானர்ஜி அரசு செயல்படுத்தி வந்த திட்டங்களை புதிய முதல்வர் சுவந்து அதிகாரி ம... மேலும் பார்க்க

'ராஜினாமா செய்கிறேன்' - அறிவித்த சித்தராமையா; இனி கர்நாடகா முதல்வர் 'டி.கே.சிவக்குமார்'!

2023-ம் ஆண்டு கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் போதே, இவருக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி... தற்போதைய கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இரண்டரை ஆண்டு ஆட்சி என்று பேசப்பட்டதாக தகவல்க... மேலும் பார்க்க

`வாரியம் வாங்கிக் கொடுங்க தலைவரே' விரட்டும் சிறுத்தைகள் டு 'பார்ட்டி பண்ட் வேண்டாம்' | கழுகார்

நெருக்குதலில் மகிழ்ச்சி மாண்புமிகு!வாரியம் கேட்கும் நிர்வாகிகள்...த.வெ.க ஆட்சியமைத்தாலும் 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோற்றிருக்கிறது. தேர்தலில் நின்று தோற்றவர்கள், கடைசி நேரத்தில் வாய்ப்பு மறுக்க... மேலும் பார்க்க

``எல்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைவது நாகரிகமான அரசியல் அல்ல!" - திருமாவளவன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லுரி இயங்கி வருகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் ராதா மோகன் சிங், எம்.பி திருமாவளவன் உள்ளிட்ட 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ... மேலும் பார்க்க