செய்திகள் :

நெல்லை: சிங்கப்பெண் படை விழிப்புணர்வு நிகழ்ச்சி; புகார் அளித்த மாணவிகள்- 3 பேர் மீது பாய்ந்த போக்சோ

post image

நெல்லை அருகேயுள்ள பாலாமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினர் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் 3 மாணவிகள் தங்களுக்கு நேந்த பாதிப்புகளைக் கூறினர். அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது அறிமுகமான நபர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதைக் கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

இதுகுறித்து ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போல 16 வயது மாணவி ஒருவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர், பின்னர் பல்வேறு எண்களில் இருந்து தொந்தரவு செய்து வந்தாகக் கூறினார். இதுகுறித்து குழந்தைகள் ஹெல்ப்லைனுக்கு தகவல் கூறப்பட்டதுடன், ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் 15 வயது மாணவி ஒருவர், தனது புகைப்படத்தை வேறொருவருடன் இருப்பது போல ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் தவறாக சித்திரித்ததாக புகார் கூறினார். இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் கூறப்பட்டு தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிங்கப்பெண் படையினர்

”இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் 3 மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை துணிச்சலாக காவல்துறையினரிடம் கூற வேண்டும். உடனடி நடவடிக்கை மோற்கொள்ளப்படும்” என, சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.   

சாத்தூர் : நடத்தையில் சந்தேகம்; கணவனின் மர்ம உறுப்பில் கத்தியால் குத்திக் கொன்ற மனைவி கைது!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் அட்டைப் பெட்டித் தயாரிப்பு நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இ... மேலும் பார்க்க

'ரூ.14 லட்சம் ரொக்கம்; 153 ஏ.டி.எம் கார்டுகள்; 52 செல்போன்கள்' - போலீஸாரை அதிர வைத்த கும்பல் கைது?

திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் போலீஸார் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் தீவிர சோதனையில் ஈடுபட்... மேலும் பார்க்க

திருச்சி: பாழடைந்த கிணற்றில் இரு வாலிபர்களின் உடல்; தனியாக கிடந்த தலை; சந்தேகம் கிளப்பும் உறவினர்கள்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கீழ ஆதிகுடி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் 7 அடி அகலம் 15 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணற்றில் இருந்து கடந்த சில தினங்களாக கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால... மேலும் பார்க்க

திருச்சி: 'கஞ்சா அடிக்கப் போறீங்களா?' - அதட்டிய இருவர்; விரட்டி விரட்டி வெட்டிய இளைஞர்கள்!

திருச்சி மாநகரம், கொட்டப்பட்டு பகுதியில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி நாகராஜ் என்பவரின் வீட்டின் அருகில் ஜஃப்ரான், ரோஹித், மெல்வின் மோகன் ஆகிய மூவரும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு இருந்துள்ளனர். இத... மேலும் பார்க்க

கிலோ கணக்கில் தங்கம்... கோடிக்கணக்கில் சொத்துகள் - DSP கைதில் அதிர்ந்துபோன அதிகாரிகள்; பின்னணி என்ன?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தெலங்கானா காவல்துறை துணை கண்காணிப்பாளர் (DSP) சங்கிரெட்டி பீம் ரெட்டி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.கடந்த மே மாதம் பீம் ரெட்டி தனது மனைவியுடன் சார்தாம் யாத... மேலும் பார்க்க

வருங்கால கணவருடன் திருமண ஏற்பாடு; காதலனுடன் ரகசியக் கல்யாணம் - சியா கோயலின் இரட்டை வாழ்க்கை ?

புனேவைச் சேர்ந்த இளம் ரியல் எஸ்டேட் அதிபர் கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சியா கோயல், தனது வருங்கால கணவரான கேத்தனை கொலை செய்வதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே, தனது ... மேலும் பார்க்க