செய்திகள் :

நெல்லை: பாலியல் தொந்தரவு கொடுத்து தப்பிய இளைஞர்கள்; தந்தையுடன் பைக்கில் விரட்டிப் பிடித்த மாணவி!

post image

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, அருகிலுள்ள கோவில்பத்துவில் உள்ள டியூசன் சென்டரில் மாலை நேரத்தில் டியூசன் படித்து இரவில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில், வழக்கம்போல் நேற்று மாலையில் டியூசன் முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 இளைஞர்கள், அந்த மாணவியை வழிமறித்து அவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவி, சத்தம் போட்டுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மாணவி அருகில் வந்து விசாரித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மாணவி விவரத்தைக் கூற, அந்த 2 இளைஞர்களையும் பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். உடனே இருவரும் பைக்கில் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து வந்த மாணவியின் தந்தையும், அந்த மாணவியும் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.

அவர்களிடம் சிக்காமல் இருக்க 2 இளைஞர்களும் பைக்கில் அதிவேகத்தில் சென்றுள்ளனர். களக்காட்டில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மாவடி பகுதியில் சென்றபோது 2 இளைஞர்களின் பைக்கை முந்திச் சென்று தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து இருவரும் பைக்கைக் கீழே போட்டுவிட்டு சாலையோரமுள்ள தனியார் தோட்டத்திற்குள் சென்றனர். தந்தையும், மாணவியும் அவர்களைப் பின்தொடர்ந்து ஓட, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் ஓடிச் சென்றனர்.  

2  பேரில் ஒருவரைப் பிடித்தனர். அவரை திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸாரின் விசாரணையில் திருக்குறுங்குடி அருகிலுள்ள வட்டக்குளத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பதும், தப்பியோடியது அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பதும் தெரிய வந்தது.

திருக்குறுங்குடி காவல் நிலையம்
திருக்குறுங்குடி காவல் நிலையம்

அதனைத் தொடர்ந்து போலீஸார் தலைமறைவான சரவணனையும் கைது செய்தனர். தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திவிட்டு தப்பிச் சென்றவர்களைத் துணிச்சலாக விரட்டிச் சென்று பிடித்த அந்த மாணவியை போலீஸார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். சினிமாவில் வருவதுபோல் நடந்த இச்சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.    

நெல்லை: போதையில் தகராறு செய்த மகன்; ஆத்திரத்தில் தாய் செய்த செயல்... விபரீதத்தில் முடிந்த சோகம்!

நெல்லையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தின் தனலட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி லதா. 56 வயதான அவருக்கு கிருஷ்ணவேணி என்ற மகளும், மாயாண்டி என்ற மகனும் உள்ளனர். மாயாண்டி மது போதைக்கு அடிமைய... மேலும் பார்க்க

சென்னை: மகனின் கண் முன்னால் தாய்க்கு பாலியல் தொல்லை; தனியார் நிறுவன ஊழியர் கைது; என்ன நடந்தது?

சென்னை, கோயம்பேடு காவல் மாவட்டத்தில் 41 வயதான பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த 08.03.2026-ம் தேதி மதுரவாயல் பகுதியிலுள்ள மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அந்தப் பெண் தன்னுடைய மகனு... மேலும் பார்க்க

சென்னை: மகளுக்கு திருமணமாகாத விரக்தியில் தந்தை தற்கொலை; அடுத்த நொடியில் மகள் எடுத்த விபரீத முடிவு

சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (57). ஆட்டோ டிரைவரான இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் பிருந்தா திருமணமாகி கணவருடன் அம்பத்தூரில் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் பாக்... மேலும் பார்க்க

ஈரோடு: கொத்தடிமைகளாக இருந்த மத்தியப் பிரதேச சிறுவர், சிறுமியர்; மாவட்ட நிர்வாகம் மீட்ட பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள ஓலப்பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சில தனியார் கரும்பு தோட்டங்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொத்தடிமைகளைப் போல நடத்துவதாக மாவட்ட நிர்வாகத்... மேலும் பார்க்க

சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை - அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் உள்ள வீட்டில் ரௌடி ஆறுமுகம் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவரோடு அவரின் நண்பன் சதீஷ் என்பவரும் தங்கியிருந்தார். அதிகாலை நேரத்தில் பைக்க... மேலும் பார்க்க

தென்காசி: திருமணத்திற்கு மறுத்த காதலி; பள்ளியின் வாசலில் வைத்து கத்திரிக்கோலால் குத்திய காதலன் கைது

தென்காசியைச் சேர்ந்தவர் சொர்ணம். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது கடையநல்லூர் அருகேயுள்ள ஆய்குடியில் ஒரு தனியார் பள்ளியில் அலுவலக உதவியாளர... மேலும் பார்க்க