செய்திகள் :

நெல்லை: லஞ்சப் புகாரில் சிக்கவைக்க சதி; மேலும் இருவர் கைது- செல்போன் உரையாடலால் சிக்கும் அதிகாரிகள்?

post image

நெல்லை தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், திடீர் சோதனை நடத்தி ரூ.2,42,500-ஐ கைப்பற்றினர். ஆனால், அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தை வைத்துச் சென்றது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளதாக சரவணபாபு, நெல்லை மாநகரக் காவல் ஆணையாளர் சந்தோஷிடம் புகார் அளித்தார்.

சரவணபாபு

இந்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், ஏரலைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான ஆனந்த் மற்றும அவரது உறவினர் முத்துசுடலை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், துணை இயக்குநர் அலுவலகத்தில் நள்ளிரவில் பணத்தை வைத்தது மேலப்பாளையம் சிவராஜபுரத்தைச் சேர்ந்த விஜய் என்பது விசாரணையில் தெரியவந்தது. மும்பை தாராவியில் தலைமறைவாக இருந்த விஜய்யைக் கைதுசெய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ரூ.40 ஆயிரம் பணத்தை கூலியாகப் பெற்றுக் கொண்டு அதிகாரியின் அலுவலகத்திற்குள் பணத்தை வைத்துச் சென்றது தெரிய வந்தது. அவரும் இது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் நெல்லை டவுன் தீயணைப்பு வீரரான மூர்த்தி மற்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான முருகேஷ் ஆகிய இருவரையும் நெல்லை மாநகர போலீஸார் கைதுசெய்தனர்.

துணை இயக்குநர் அலுவலகம்

இதில், தீயணைப்பு அலுவலகத்தில் பணத்தை வைக்க விஜய்க்கு முருகேஷ் உதவியதாகக் கூறப்படுகிறது. இவரின் சொந்த ஊர், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஆகும். இந்த விவகாரத்தின் பின்னணியில் நெல்லை மாவட்டத்தின் தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும் திருப்பூரில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடல் போலீஸாரிடம் சிக்கியுள்ளதால், தீயணைப்புத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. துணை இயக்குநர் அலுவலகத்தின் சாவியை விஜய்யிடம் கொடுத்தது யார்? சாவியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதிகாரி யார்?

போலீஸார் விசாரணை

விஜய் வந்த இரு சக்கர வாகனம் மற்றும் அவர் அணிந்திருந்த தீயணைப்பு துறை சீருடை யாருடையது? லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரகசிய தகவலை கசிய விடுவது யார்? என பல முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.

கடையநல்லூர்: தையல் மெஷின் பெல்ட்டால் மனைவியைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித்தநல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன், வெள்ளதாய் தம்பதியினரின் மகள் வேல்மதிக்கும், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரு... மேலும் பார்க்க

பெண் எரித்துக் கொலை; நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை - முன்னாள் காவலர் கைதான அதிர்ச்சி பின்னணி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் கடந்த 5-ஆம் தேதி பிணமாக கிடந்தார். அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படு... மேலும் பார்க்க

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க