செய்திகள் :

நெல்லை: 4 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் - மதபோதகருக்கு மரண தண்டனை!

post image

நெல்லை மாவட்டம் மேலஇலந்தக்குளத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம். கிறிஸ்துவ மத போதகர். 47 வயதான இவர் தேவர்குளம் காவல் எல்லைக்கு உள்பட்ட மேல இலந்தைக்குளம் பகுதியில் சபை நடத்தி மதபோதகம் செய்து வந்துள்ளார். இந்த சபைக்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரார்த்தனைக்காக வருவது வழக்கம்.

அத்துடன், சபையில் உள்ளவர்களை மதபோதகத்துக்காக வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். அதன்படி,் கடந்த 2022-ம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உள்பட நான்கு சிறுமிகளை பெற்றோர் சம்மதத்துடன் வெளியூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

வெளியூரில் தங்கியிருந்தபோது, போதகர் ஆபிரகாம் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன், இது பற்றி பெற்றோர் அல்லது கிராமத்தினர் யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.

போதகரின் அத்துமீறிய செயலால் அச்சம் அடைந்த சிறுமிகள், இது பற்றி பெற்றோரிடம் நடந்தவைகளைத் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் இது பற்றி தேவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது பற்றி விசாரித்த போலீஸார், போதகர் ஆபிரகாம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதகர் ஆபிரகாம் மீதான குற்ற்ச்சாட்டு தொடர்பான வழக்கின் விசாரணை, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காவல்துறையினர் தங்களது விசாரணையின் போது, குற்றச்சாட்டுகள் குறித்த வலுவான ஆதாரங்களைத் தெரிவித்தனர்.

அத்துடன், அரசு வழக்கறிஞரான உஷா தன் வாதத்தை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, விசாரணையின் முடிவில் ஆபிரகாம் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. குற்றம் நிரூபணமானதால் போதகர் ஆபிரகாமுக்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், அவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான நான்கு சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம், மொத்தம் ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசிற்கு உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு விவரங்களை நீதிபதி வாசித்ததும் நீதிமன்ற அறையிலேயே ஆபிரகாம் மயங்கி விழுந்ததார். அதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மதபோதகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், "போக்சோ வழக்குகளில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். மரண தண்டனை விதிக்கப்பட்டால் தான் இத்தகைய கொடூரக் குற்றங்கள் குறையும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில், தூக்கு தண்டணை விதிக்கப்படுவது இது 4-வது முறையாகும்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க