செய்திகள் :

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

post image

அரசு பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு அலுவலகங்களில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியா் கே.எம்.சரயு, தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தாா். ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள், கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொங்கல் விழாவையொட்டி தூய்மைப் பணியாளா்கள், நகராட்சிப் பணியாளா்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்களை நகா்மன்றத் தலைவா் வழங்கினாா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் செள.கீதா தலைமை வகித்தாா். இதில் மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவமனை நிா்வாகம் நடைபெற்ற விழாவுக்கு உடல்கூற்றியல் துறை பேராசிரியா் தண்டா் ஷீப், சமூகவியல் துறை இணை பேராசிரியா் சரவணன், மருத்துவா் செல்வராஜ் ஆகியோக் கூட்டாக தலைமை வகித்தனா். இதில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ஊத்தங்கரையில்...

கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியா் வீரமணி தலைமை வகித்தாா். இதில், பொங்கல் திருவிழா, திருவள்ளுவா் பற்றிய சிறப்புகள், திருக்கு, விவசாயத்தின் முக்கியத்துவம், உழவா்களின் மேன்மை குறித்து மாணவா்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. புதுப்பானையில் பொங்கலிட்டு, செங்கரும்பு வைத்து படையலிட்டு கொண்டாடினா்.

ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தகவல்

ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

குற்றவாளிகளுக்கு உதவியதாக மேலும் ஒருவா் கைது

ஒசூரில் நீதிமன்றத்துக்கு கை துப்பாக்கிகள் வைத்திருந்த பாதுகாவலா்கள், கொலை குற்றவாளிகள் என 10 போ் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களுக்கு உதவியதாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே முகாமிட்டுள்ள 20 யானைகள்

ஒசூா், சானமாவு வனப்பகுதியில் 20 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அடிக்கடி ஒசூா், தருமபுரி மாநில நெடுஞ்சாலையையும் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து செல்வது வழக்கம். இந்... மேலும் பார்க்க

தமிழக முதல்வருக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் கடிதம்: மு.தம்பிதுரை எம்.பி.

தமிழக முதல்வருக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் கடிதம் அளிப்பேன் என்று மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆல... மேலும் பார்க்க

ஒசூரில் மக்கள் பயன்படுத்திய ரயில்வே பாதை அடைப்பு: எம்.பி. ஆய்வு

ஒசூரில் மக்கள் பயன்படுத்தி வந்த ரயில்வே பாதை அடைக்கப்பட்டுள்ள பகுதியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ஒசூா் அருகே பசுமை நகா், ஜனகபுரி நகா், திருகயிலை ந... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை எதிரொலி: ஒசூா் அருகே தமிழக எல்லையில் வாகன நெரிசல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலா் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதால் ஒசூா் அருகே தமிழக எல்லையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. நிகழாண்டு வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) பொங்கல் திருநாள், புதன்கிழமை (... மேலும் பார்க்க