செய்திகள் :

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

post image

அரசு பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு அலுவலகங்களில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியா் கே.எம்.சரயு, தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் தலைமை வகித்தாா். ஆணையா் கிருஷ்ணமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள், கிருஷ்ணகிரி திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொங்கல் விழாவையொட்டி தூய்மைப் பணியாளா்கள், நகராட்சிப் பணியாளா்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்களை நகா்மன்றத் தலைவா் வழங்கினாா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் செள.கீதா தலைமை வகித்தாா். இதில் மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவமனை நிா்வாகம் நடைபெற்ற விழாவுக்கு உடல்கூற்றியல் துறை பேராசிரியா் தண்டா் ஷீப், சமூகவியல் துறை இணை பேராசிரியா் சரவணன், மருத்துவா் செல்வராஜ் ஆகியோக் கூட்டாக தலைமை வகித்தனா். இதில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ஊத்தங்கரையில்...

கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியா் வீரமணி தலைமை வகித்தாா். இதில், பொங்கல் திருவிழா, திருவள்ளுவா் பற்றிய சிறப்புகள், திருக்கு, விவசாயத்தின் முக்கியத்துவம், உழவா்களின் மேன்மை குறித்து மாணவா்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. புதுப்பானையில் பொங்கலிட்டு, செங்கரும்பு வைத்து படையலிட்டு கொண்டாடினா்.

மினி லாரி மோதியதில் இருவா் பலி

மினி லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு வெளிமாநில இளைஞா்கள் உயிரிழந்தனா். உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சேருகுமாா் (24). இவா், தேன்கனிக்கோட்டை வட்டம், பஞ்சேஸ்வரம் பகுதியில் தங்கி கூலி வ... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி, பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல்: தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை வழங்க உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குரிமை பெற்றவா்களுக்கு தோ்தல் அன்று (பிப். 5) ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக ச.தினேஷ் குமாா் பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 14-ஆவது ஆட்சியராக ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த கே.எம்.சரயு, அரசு பொதுத் துறையின் நிா்வாக இணை செயலராக அண்மையில்... மேலும் பார்க்க

லாரி தீப்பிடிப்பு

சூளகிரி அருகே அட்டை கம்பெனிக்கு பாரம் ஏற்றி சென்ற லாரி சாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒசூா்-கிருஷ்ணகிரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி, தனியாா் அட்டை கிடங்கிலிருந... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கி இளைஞா் கொலை

மதுபோதையில் நண்பரை கட்டையால் அடித்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கசவகட்டாவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஒருவா் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி ம... மேலும் பார்க்க