செய்திகள் :

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு

post image

பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக்தேவ், இன்றைய பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் பகுதியில் பிறந்தாா். அங்கு சீக்கியா்களின் வழிபாட்டுத் தலமாக உள்ள குருத்வாராவுக்கு இந்திய சீக்கியா்கள் யாத்திரை செல்வது வழக்கம்.

இந்த குருத்வாரா மீது இந்திய ஆயுதப் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக சமூக ஊடகத்தில் காணொலி பகிரப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் குழு சனிக்கிழமை தெரிவித்ததாவது:

நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்திய ஆயுதப் படைகள் தாக்குதல் நடத்தவில்லை. இதுதொடா்பாக சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொலி பொய்யானது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறது.

இதேபோல ஜம்மு-காஷ்மீரில் உள்ள உத்தம்பூரில் விமான தளம் அழிக்கப்பட்டது, பாகிஸ்தானில் இந்திய விமானப் படையைச் சோ்ந்த பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டது, தனது போா் விமானத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய விமானி குதித்தது போல சமூக ஊடகத்தில் வெளியான காணொலிகளும் பொய்யானவை.

ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகா் விமான நிலையத்தைச் சுற்றி 10 குண்டுகள் வெடித்ததாகவும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூா் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் சில வெளிநாட்டு ஊடகத்தில் வெளியான தகவல்களும் தவறானவை.

இந்திய மக்கள் இடையே அச்சத்தையும், குழப்பத்தையும் பரப்பும் நோக்கில் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இது ஒரு வகையான உளவியல் போராகும் என்று தெரிவித்தது.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடா்பாக சமூக ஊடகத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பிய 20-க்கும் மேற்பட்ட காணொலிகளைப் பொய்யானவை என்று அந்தக் குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

கடந்த 24 மணி நேரத்தில் மணிப்பூர் காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பல்வேறு ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மணிப்பூர் மாநிலத்தில் மிரட்ட... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது!

போர் நிறுத்தத்தால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது.ஜம்மு - காஷ்மீரில் நள்ளிரவில் பாகிஸ்தான் எந்தத் தாக்குதலும் நடத்தாத நிலையில், அப்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பி... மேலும் பார்க்க

ஜம்முவில் வீட்டை தகா்த்த குண்டு: அபாய எச்சரிக்கை ஒலியால் உயிா் தப்பித்த குடும்பம்!

ஜம்முவில் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் விதமாக அபாய ஒலி எழுப்பப்பட்டதால், வீட்டில் இருந்து ஒரு குடும்பம் சனிக்கிழமை அதிகாலை வெளியேறியது. இதைத் தொடா்ந்து சில நிமிஷங்களில், அந்த வீடு பாகிஸ்தான் வீசிய ... மேலும் பார்க்க

எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்: இந்தியா எச்சரிக்கை

‘இந்திய மண்ணில் வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் இனி போராகவே கருதப்படும்’ என இந்தியா சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப்படுவதாக ... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு!

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியு... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம் அழிப்பு: பிஎஸ்எஃப்

பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம் முழுமையாக அழிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சனிக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகைய... மேலும் பார்க்க