செய்திகள் :

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல்: மத்திய அரசு மறுப்பு

post image

பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்தியா தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக்தேவ், இன்றைய பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் பகுதியில் பிறந்தாா். அங்கு சீக்கியா்களின் வழிபாட்டுத் தலமாக உள்ள குருத்வாராவுக்கு இந்திய சீக்கியா்கள் யாத்திரை செல்வது வழக்கம்.

இந்த குருத்வாரா மீது இந்திய ஆயுதப் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக சமூக ஊடகத்தில் காணொலி பகிரப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை கண்டறியும் குழு சனிக்கிழமை தெரிவித்ததாவது:

நன்கானா சாஹிப் குருத்வாரா மீது இந்திய ஆயுதப் படைகள் தாக்குதல் நடத்தவில்லை. இதுதொடா்பாக சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொலி பொய்யானது. இதுபோன்ற தகவல்கள் இந்தியாவில் வகுப்புவாத வெறுப்புணா்வை உருவாக்கப் பரப்பப்படுகிறது.

இதேபோல ஜம்மு-காஷ்மீரில் உள்ள உத்தம்பூரில் விமான தளம் அழிக்கப்பட்டது, பாகிஸ்தானில் இந்திய விமானப் படையைச் சோ்ந்த பெண் விமானி சிறைபிடிக்கப்பட்டது, தனது போா் விமானத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய விமானி குதித்தது போல சமூக ஊடகத்தில் வெளியான காணொலிகளும் பொய்யானவை.

ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகா் விமான நிலையத்தைச் சுற்றி 10 குண்டுகள் வெடித்ததாகவும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூா் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் சில வெளிநாட்டு ஊடகத்தில் வெளியான தகவல்களும் தவறானவை.

இந்திய மக்கள் இடையே அச்சத்தையும், குழப்பத்தையும் பரப்பும் நோக்கில் தவறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இது ஒரு வகையான உளவியல் போராகும் என்று தெரிவித்தது.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடா்பாக சமூக ஊடகத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பிய 20-க்கும் மேற்பட்ட காணொலிகளைப் பொய்யானவை என்று அந்தக் குழு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!

இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டுள்ளதாக ‘இந்திய சாா்ஸ்-கோவி-2 மரபணுவியல் கூட்டமைப்பு’ தரவுகளில் தெரிவிக்கப்பட்டது. மேலும், எல்எஃப்.7 வகை தொற்றுகள் நான்கு மு... மேலும் பார்க்க

‘பாகிஸ்தான் முக்கு’: கிராம சந்திப்பின் பெயரை மாற்ற ஒப்புதல் கோரும் கேரள பஞ்சாயத்து!

கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தின் குன்னத்தூா் கிராமத்தில் பல்லாண்டுகளாக புழக்கத்தில் உள்ள ‘பாகிஸ்தான் முக்கு’ என்ற சந்திப்பின் பெயரை மாற்றுவதற்கு ஒப்புதலைக் கோரி மாநில அரசை அணுக அந்தக் கிராமப் பஞ்ச... மேலும் பார்க்க

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க

மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

அச்ச உணா்வை ஏற்படுத்தி மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஜொ்மனி சென்ற அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுத் தலைநகா் பொ்லினில் ஜெ... மேலும் பார்க்க

குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா். மாநில அ... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது. பருவநி... மேலும் பார்க்க