செய்திகள் :

பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி

post image

கொங்கு மண்டலம்

2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டது. செங்கோட்டையன் தவெக வருகைக்கு பிறகு கொங்கு மண்டல அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. கொங்கு மண்டலத்தில் ஏற்கெனவே அதிமுக வலுவாக உள்ளது.

பாஜக - அதிமுக கூட்டணி
பாஜக - அதிமுக கூட்டணி

அதிமுகவை தொடர்ந்து பாஜகவும் அங்கு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் கோவை வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நான் அதிகமுறை விசிட் செய்த மாவட்டம் கோவை” என்று கூறினார். ஆக திமுகவும் கொங்கு மண்டலத்தில் தீவிரமாக களமாட தொடங்கியுள்ளது.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய கோவை வருகைக்கு பிறகு, பாஜக-வினர் அங்கு கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். மோடி விசிட்டுக்கு பிறகு பாஜக மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், கோவை வந்து தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கோவை பாஜக

2021 சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 2 எம்.எல்.ஏக்களை வெற்ற நிலையில், 2026 தேர்தலில் அந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கோவை பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, “கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுகவை விட அதிக வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தோம்.

கோவை
கோவை

அதனால் இந்த முறை அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளோம். வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற சிட்டிங் தொகுதியான கோவை தெற்கு, கோவை வடக்கு, கிணத்துக்கடவு ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்.

கிணத்துக்கடவு வழங்காவிடின் சிங்காநல்லூர் தொகுதி வேண்டும் என்று அழுத்தம் கொடுப்போம். இந்த மண்ணைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி ஆகியிருப்பது கவுண்டர் சமுதாயத்தில் எங்கள் கூட்டணிக்காக பலத்தை அதிகரித்துள்ளது. அதனால் கூடுதல் தொகுதிகள் என்பதில் சமசரம் கிடையாது.” என்றனர்.

வேலுமணி

இந்த முடிவால் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அதிர்ச்சியாகியுள்ளார். பொதுவாக அவர் கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை தான் வழங்குவார். கடந்தமுறை கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 1 தொகுதியை மட்டுமே அவர் கூட்டணிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்

மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது.மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியா... மேலும் பார்க்க

"அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற... மேலும் பார்க்க

புதிய மேயர் யார்? - மும்பை உட்பட மகா., முழுவதுமுள்ள 29 மாநகராட்சிளுக்கு வரும் ஜன.,15ம் தேதி தேர்தல்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை... மேலும் பார்க்க