செய்திகள் :

"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி

post image

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, "த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய இலக்கு தேர்தல் குறி. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை.

பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய்

எங்களுக்கு போட்டியும் யாரும் இல்லை. களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம். எங்களுக்கு அரசியல் எதிரி தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடு எந்த பகைமையும் கிடையாது. தமிழகத்தை வாழ வைக்க தி.மு.க-வால் தான் முடியும். பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய். த.வெ.க என்பது பா.ஜ.க-வின் சி டீம். ஒரு காலத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்.

ragupathi

எல்லாவற்றையும் முடிவெடுத்து தான் நாங்கள் சொல்கிறோம். தேர்தல் அறிக்கையை கொடுக்கிறோம். நாங்கள் கடந்த காலங்களில் கொடுத்த டி.வி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதன் பின்பு கொடுத்தவர்கள் கொடுத்தவை தகர டப்பா ஆகிவிட்டது. அறிவுத் திருவிழா என்பது தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை திராவிட இயக்கத்தின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறைகள் அறிய செய்வது என்பதை வலியுறுத்தி நாங்கள் நடத்திய திருவிழாவே. அவர்களுக்கு அவற்றையெல்லாம் பற்றிய புரிதல் எல்லாம் கிடையாது. அக்கறை கிடையாது. அவர்களுடைய ஒரே நோக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான்.

தமிழ் மக்கள் பற்றியோ, தமிழர்களின் வரலாற்றைப் பற்றியோ கொள்கைகளைப் பற்றியோ கோட்பாட்டை பற்றிய எதைப் பற்றியும் அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தங்களைத் தானே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றி நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்?. ஏன் எதிர்வினை ஆற்ற வேண்டும், காங்கிரஸில் இருந்து எங்களோடு பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது, அதற்குப் பிறகு கூட்டணி குறித்த கேள்வி தேவை இல்லாதது. சிண்டு மூட்டுகிற வேலையை யார் செய்தாலும் அது எங்கும் எடுபடாது" என்றார்.

மகாராஷ்டிரா: "மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும்" - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சி உட்பட மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின்... மேலும் பார்க்க

`அமைச்சர் தொகுதியில், படம் போட்டு பரிசு பொருள் விநியோகம்’ - கோவி.செழியன் மீது எழுந்த புகார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று திருவிடைமருதுார் (தனி) தொகுதி. இங்கு தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவி.செழியன் தற்போது உயர்க்கல்வித்துற... மேலும் பார்க்க

புதுச்சேரி: "விஜய் ஒரு சின்ன குழந்தை; சினிமா வசனத்தை மேடையில் பேசுகிறார்" - ஜெகத்ரட்சகன் காட்டம்

புதுச்சேரியில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. அதன்படி நவம்பர் 23-ம் தேதி மண்ணாடிப்பட்டு தொகுதியில் எம்.பி ஜெகத்ரட்சன், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவ... மேலும் பார்க்க

"ஆச்சரியக்குறி, தற்குறி... எந்தக் குறியாக இருந்தாலும் கவலை இல்ல"- விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் இன்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``ஆச்சரியக்குறி, தற்குறி என விஜய் எந்தக் குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய குறி தேர்தல் க... மேலும் பார்க்க

'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை' உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது?

வரி விதிப்பு, எச்சரிக்கை, மிரட்டல்... - இப்படி என்ன செய்து பார்த்தும், ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்தியபாடில்லை. இந்தப் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓயாமல் முயன்று வருகிறார். ஆனால்,... மேலும் பார்க்க

ஆட்டத்தை தொடங்கிய மகாராஷ்டிரா பாஜக; தொட்டதற்கெல்லாம் டெல்லி சந்திப்பு! - சிக்கலில் ஷிண்டே?

மகாராஷ்டிராவில் தற்போது பா.ஜ.க, சிவசேனா(ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கூட்டணி அரசு பதவியில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் சாதாரண ஒரு அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராகவும், துணை முதல்... மேலும் பார்க்க