செய்திகள் :

"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி

post image

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, "த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களுடைய இலக்கு தேர்தல் குறி. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க-வுக்கு இல்லை.

பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய்

எங்களுக்கு போட்டியும் யாரும் இல்லை. களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம். எங்களுக்கு அரசியல் எதிரி தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு யாரோடு எந்த பகைமையும் கிடையாது. தமிழகத்தை வாழ வைக்க தி.மு.க-வால் தான் முடியும். பா.ஜ.க-வின் சீ டீம் தான் விஜய். த.வெ.க என்பது பா.ஜ.க-வின் சி டீம். ஒரு காலத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்.

ragupathi

எல்லாவற்றையும் முடிவெடுத்து தான் நாங்கள் சொல்கிறோம். தேர்தல் அறிக்கையை கொடுக்கிறோம். நாங்கள் கடந்த காலங்களில் கொடுத்த டி.வி இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதன் பின்பு கொடுத்தவர்கள் கொடுத்தவை தகர டப்பா ஆகிவிட்டது. அறிவுத் திருவிழா என்பது தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை திராவிட இயக்கத்தின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறைகள் அறிய செய்வது என்பதை வலியுறுத்தி நாங்கள் நடத்திய திருவிழாவே. அவர்களுக்கு அவற்றையெல்லாம் பற்றிய புரிதல் எல்லாம் கிடையாது. அக்கறை கிடையாது. அவர்களுடைய ஒரே நோக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான்.

தமிழ் மக்கள் பற்றியோ, தமிழர்களின் வரலாற்றைப் பற்றியோ கொள்கைகளைப் பற்றியோ கோட்பாட்டை பற்றிய எதைப் பற்றியும் அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தங்களைத் தானே தரம் தாழ்த்திக் கொண்டுள்ளார். மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றி நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்?. ஏன் எதிர்வினை ஆற்ற வேண்டும், காங்கிரஸில் இருந்து எங்களோடு பேசுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது, அதற்குப் பிறகு கூட்டணி குறித்த கேள்வி தேவை இல்லாதது. சிண்டு மூட்டுகிற வேலையை யார் செய்தாலும் அது எங்கும் எடுபடாது" என்றார்.

திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்

மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது.மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியா... மேலும் பார்க்க

"அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்!" - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற... மேலும் பார்க்க

புதிய மேயர் யார்? - மும்பை உட்பட மகா., முழுவதுமுள்ள 29 மாநகராட்சிளுக்கு வரும் ஜன.,15ம் தேதி தேர்தல்

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளின் பதவிக்காலம் கடந்த 2022ம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை... மேலும் பார்க்க