செய்திகள் :

பாமக: `ஏன் அன்புமணியின் கூட்டணி பேச்சுவார்த்தை செல்லாது?' - ராமதாஸ் வழக்கறிஞர் விளக்கம்

post image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாமக தலைவர் அன்புமணியும் அறிவித்த கூட்டணி செல்லுமா என்பது குறித்து ராமதாஸின் வழக்கறிஞர் அருள் பேசியதாவது...

"மருத்துவர் ஐயா (ராமதாஸ்) பா.ம.க-வின் தலைவராக இருக்கும் பட்சத்தில், விதி 13-ன் படி, அவரது ஆலோசனை, அனுமதி இல்லாமல், எந்தக் கூட்டமும் நடத்தப்படக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதை மதிக்காமல், நடைப்பயணம் செய்வது, பொதுக்குழு கூட்டுவது சட்டத்திற்குப் புறம்பானது... கட்சிக்குப் புறம்பானது என்று தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம்.

அதை திரித்து நாங்கள் தலைவர் பதவிக்காக வழக்கு போட்டோம் என்று கூறுகிறார்கள்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

17/8/2025-ல் இருந்து மருத்துவர் ஐயா தான் தலைவர். ஆனால், அதற்கு முன்பு, முந்திக்கொண்டு... போட்டி போட்டுக்கொண்டு 9/8/2025-ல் கூட்டம் ஒன்றை நடத்தினார் அவர்.

இது தவறு என்று தான் வழக்கு போட்டோம்.

28/5/2022-ல் இருந்து 28/5/2025 வரையிலேயே அன்புமணியை தலைவராக தேர்ந்தெடுத்திருந்தார் ஐயா.

இதை மறைக்கத் தான் ஊழல் செய்து கூட்டம் நடத்தினார் அன்புமணி.

21/6/2023 - 21/6/2026 வரையில் அன்புமணி பாமகவின் தலைவராக தொடர்வார். அதை பொதுக்குழு ஒப்புக்கொண்டுள்ளது என்று மோசடி செய்து ஆவணம் ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி தந்துள்ளார்.

அதை ஒப்புக்கொண்டு தேர்தல் ஆணையமும் ஆவணம் ஒன்றை அன்புமணிக்கு கொடுத்துள்ளது. கட்சியின் நிறுவனர் என்கிற முறையில், ஐயாவிற்கு அந்த ஆவணத்தைக் காட்டியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இன்னொன்று, தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள ஆவணத்தில், யாராவது இந்தக் கட்சியின் தலைவர் என்று பேச்சை எழுப்பினாலே, அன்புமணி தலைவர் என்பது செல்லாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பாமக தலைமை வழக்கின் விசாரணையின் போது, டெல்லி உயர் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம், அன்புமணியை தலைவராக அங்கீகரிக்கும் உரிமை எங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

17/12/2025-ல், நீங்கள் தலைமையைக் கோரியுள்ளதால், கட்சியின் உட்கட்சி அமைப்பு படி முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நீங்கள் தலைவராகலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.

அதன் படி, தலைமை நிர்வாகக்குழு, பொதுக்குழு, செயற்குழு என அனைத்திலும் ஐயா தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஆக, இப்போது ஐயா தான் தலைவர். கட்சியின் விதி 31-ன் படி, ஐயா மட்டுமே நிறுவனராகவும், தலைவராகவும் இருந்து தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய உரிமை உள்ளது.

மற்றவர்கள் பேசும் கூட்டணி செல்லாது. அது நீதிமன்ற அவமதிப்பாகும்".

'2025-ம் ஆண்டு 8 முறை மோடி ட்ரம்பிடம் பேசியுள்ளார்' - அமெரிக்காவிற்கு இந்தியா பதில்

"இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசினால், இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும்" - இது பாட்காஸ்ட் ஒன்றில் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கின் ... மேலும் பார்க்க

கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்' பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?

உலகின் வல்லரசு நாடுகளின், `நாடு பிடிக்கும் போட்டி'யில், ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, சீனா - தைவானுக்குப் பிறகு அந்த வரிசையில் தனக்கான ஒரு துண்டைப் போட்டிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபர் ட்ரம்ப... மேலும் பார்க்க

மோடி 'இதை' மட்டும் செய்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை சக்சஸ்! - ட்ரம்பின் அதிகாரி

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி நிச்சயம் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சுமை. இந்தியா, அமெரிக்கா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடினால், இந்தச் சுமை குறையும் எ... மேலும் பார்க்க

அதிமுக: இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த தடைக்கோரி வழக்கு; இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி

அதிமுக-வில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர... மேலும் பார்க்க

எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தி்த்து பேசியிருக்கிறார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொத... மேலும் பார்க்க