செய்திகள் :

'விஜய்யின் ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து வியந்தேன்.!'- பிரியங்கா சோப்ரா ஷேரிங்

post image

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு பான் இந்தியா படமாக உருவாகி வரும் ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ரா விஜய் குறித்து பேசியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

அந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் விஜய் குறித்து பேசியிருக்கும் பிரியங்கா சோப்ரா, "புகழ் என்றால் என்ன என்பதை முதல்முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது 'தமிழன்' படம்தான்.

அந்த சமயத்தில் அந்தப் படத்தில் என்னுடன் நடித்த விஜய் மிகவும் பிரபலமானவர்.

செட்களுக்கு நான் செல்லும்போது, அவர் நடனமாடுவதை, நடிப்பதை பார்க்க மட்டுமே அவ்வளவு கூட்டம் வரும். அது என்னுடைய முதல் படம். சினிமா பின்னணி பற்றி எதுவும் தெரியாது.

அவரது ரசிகர் பட்டாளத்தைப் பார்த்து வியந்தேன். இந்தியாவில், திரைப்படங்களின் மீதான காதல் அப்படியானது. உணர்ச்சிவசமான ரசிகர்கள் ஏராளம்.

பிரியங்கா சோப்ரா - விஜய்
பிரியங்கா சோப்ரா - விஜய்

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு இருந்த பணிவைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஷூட்டிங் வந்தால் அங்கிருந்து முடியும் வரை நகர மாட்டார். அதை நானும் பின்பற்றி வருகிறேன்” என தெரிவித்திருந்தார்

ஆரண்ய காண்டம்: `அந்தக் காட்சிக்கு மட்டும் 15 டேக் எடுத்தேன்.!' - 'சுப்பு' யாஸ்மின் பேட்டி

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் 'ஆரண்ய காண்டம்' திரைப்படம் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகிறது.புதுமையான திரைமொழி, தமிழின் முதல் நியோ நாயர் திரைப்படம் என புதியதொரு பார்முலாவை தமிழ் சினிமாவுக்கு இப்படம் அறி... மேலும் பார்க்க

``8 ஆண்டுகள் ஆகிவிட்டது; ஆனால் கடந்த 24 மணிநேரத்தில் எல்லை தாண்டிவிட்டீர்கள்" - ராஷ்மிகா காட்டம்

ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா இருவருக்கும் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி உதய்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.ராஷ்மிகா திருமணம் முடிந்ததில் இருந்தே அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்த பல்வேறு தகவல... மேலும் பார்க்க

`வரவு செலவுகளை ஆர்த்தி தான் பார்க்குறாங்க; அவங்க இல்லைன்னா.!'- மனைவி குறித்து சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கித்தில், ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘தாய் கிழவி’.இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக... மேலும் பார்க்க

Hansika: 4 ஆண்டு திருமண வாழ்க்கை - விவாகரத்து பெற்ற ஹன்சிகா; ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை!

கடந்த 2011ம் ஆண்டு தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. தொடர்ந்து 'வேலாயுதம்', 'அரண்மனை', 'ரோமியோ ஜுலியட்', 'சிங்கம் 2', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்ளிட்ட படங்களில் நடித்... மேலும் பார்க்க