செய்திகள் :

'வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாள்களில் சீராகும்' - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சொல்வது என்ன?

post image

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்திருந்தது.

LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் வணிக சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டிருக்கிறது.

சிலிண்டர் | கேஸ் தட்டுப்பாடு
சிலிண்டர் | கேஸ் தட்டுப்பாடு

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரவும் நிலையில், பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது.

வாகனங்களில் ஃபுல் டேங்க் நிரப்பியதோடு மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் பாட்டில்களிலும், கேன்களிலும் பலர் பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மக்களவையில் இன்று (மார்ச் 12) பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், "நவீன எரிசக்தி வரலாற்றில் உலகம் இது போன்ற தருணத்தை எதிர்கொண்டதில்லை. உள்நாட்டு தேவைக்காக LPG விநியோகம் தடையின்றி தொடரும்.

ஹார்முஸ் நீரிணை வழியே வரும் கச்சா எண்ணெய்யை விட மாற்று வழிகளில் கூடுதல் எண்ணெய் வருகிறது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

சீரான எரிப்பொருள் விநியோகத்தை பெற பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சிகளே காரணம்.

தடையின்றி கேஸ் கிடைக்க உறுதி செய்வோம். வணிக சிலிண்டர் விநியோகம் 10 நாட்களில் சீரடையும்.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், விமான எரிப்பொருள் இருப்பில் எந்த குறையும் இல்லை. நாட்டிற்கு தேவையான அளவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

சென்னை ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர்!

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இருக்கும் இந்தி எழுத்துகளை அழித்து திருமுருகன் காந்தி உள்... மேலும் பார்க்க

`எங்க ஆளுங்கதான், ஆனா திமுக MLA' - ஒற்றை சீட் எனும் முட்டுச் சந்தில் மதிமுக! - காரணம் யார்?

நேற்று மாலை முதல் சமூக ஊடகங்கள் முழுக்க கட்சியில் மிச்சமிருக்கிற மதிமுக தொண்டர்களின் வலிகள் நிறைந்த பதிவுகளைப் பார்க்க முடிகிறது.மதிமுகவிலிருந்து வெளியேறிவிட்ட மல்லை சத்யா கூட, "புரண்டு புரண்டு படுத்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு சீல்!’- மாவட்ட ஆட்சியர் அதிரடி

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணியை மூடியது ஈரான். உலகின் 20% எண்ணெய் வர்த்தகம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது என்பதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்க... மேலும் பார்க்க

'நண்பன்' ஈரானை தாக்கியும் சீனா அமைதி காப்பது ஏன்?!

ஈரான், சீனா - இரண்டும் மிக நல்ல நட்பு நாடுகள். எந்த அளவுக்கு நட்பு நாடுகள் என்றால், ஈரான் போர் தொடங்கி 13 நாள்கள் ஆகின்றன. இந்த 13 நாள்களில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் ஹா... மேலும் பார்க்க

'தேமுதிகவுக்காக எதுக்கு தியாகம் பண்ணணும்?' - எரிச்சலில் கூட்டணி கட்சிகள்; அறிவாலயத்தின் ப்ளான் என்ன?

கூட்டணி கட்சிகளிடம், தொகுதிகளை குறைத்துக் கொள்ள சொல்லி வலியறுத்திக் கொண்டிருக்கிறது அறிவாலயம். திமுகவின் வலையில் முதல் ஆடாக தலையை கொடுத்திருக்கிறது மதிமுக.அறிவாலயம்கடந்த முறை 6 சீட்டுகளை வாங்கிய மதிமு... மேலும் பார்க்க

Chennai : 'ஸ்டாக் இல்லை' - காலியான பெட்ரோல் பங்குகள்; பதற்றமடையும் சென்னை வாகன ஓட்டிகள்!

அமெரிக்கா - ஈரான் போரால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயு பொருட்களின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று பல பெட்ரோல் பங்குகளில் 'ஸ்டாக் இல்லை' என்கிற பலகை ... மேலும் பார்க்க