செய்திகள் :

பாமக: "ஐயா ராமதாஸ் இல்லாத பாமக பிணத்துக்குச் சமம்" - ஸ்ரீகாந்தி காட்டம்

post image

பா.ம.க கட்சியில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், சேலத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிச. 29) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில், பா.ம.க தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் மே 29-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும், அதனால், பா.ம.க-வின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும், தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாமக அன்புமணி
பாமக அன்புமணி

தொடர்ந்து, பாமகவின் ஜி.கே. மணியை கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறிய அன்புமணிக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாமக செயல்தலைவராக ஶ்ரீகாந்தியும், கௌரவத் தலைவராக ஜிகே மணியும், பொதுச்செயலராக முரளிசங்கரும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்தப் பொதுகூட்டத்தில் ஶ்ரீகாந்தி உரையாற்றினார். அப்போது, ``இவ்வளவு தூரம் நாம் பயணித்து வந்திருப்பது பணத்துக்காவோ, பதவிக்காகவோ, அல்லது சில கும்பல் போல நாடகம் ஆடவோ அல்ல. நம் சமூகத்திற்காக இத்தனை ஆண்டுகள் போராடிய நன்றி உணர்ச்சி.

இப்போது ஒரு மகளாக, வன்னிய குல தமிழச்சியாக நியாயம் கேட்க வந்திருக்கிறேன். இன்று காலை அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.

40 ஆண்டுகாலம் அரசியலில் கோலோச்சியவரின் கண்ணில் வலி தெரிந்தது. தான் பெற்று, மாரோடு அரவணைத்து வளர்த்த மகன் முதுகில் குத்திய வலி அது. ஐயாவை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி, கேவலப்படுத்திப் பேசுகிறார்கள். ஐயாவின் கட்சியை அவரிடமிருந்தே பிடுங்குகிறார்கள். இதற்கு மேலும் நாம் பொறுமையாக இருக்க முடியாது.

ராமதாஸ் - ஸ்ரீகாந்தி
ராமதாஸ் - ஸ்ரீகாந்தி

ஐயாவை கேள்வி கேட்க நீ யார்? உனக்கு என்ன தகுதி இருக்கிறது. நீ இப்போது காரில் கோர்ட் போட்டுக்கொண்டு ஊர் சுற்றுகிறாயே அது என்ன உன் உழைப்பா? நீ படித்து வாங்கின டாக்டர் பட்டம், எம்.பி பதவி, அமைச்சர் பதவி இதெல்லாம் நீ உழைச்சு வாங்குனதா...

இது ஐயா உங்களுக்குப் போட்ட பிச்சை. ஐயா இல்லாத பா.ம.க பிணத்துக்கு சமம். அந்தப் பிணத்தை வச்சு அரசியல் பண்ணலாம்னு அன்புமணி டீம் நினைக்கிறது. ஆனால் இந்த ஸ்ரீகாந்தி உயிரோடு இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது" என ஆவேசமாகப் பேசினார்.

DMDK: திமுக, அதிமுக, தவெக... யாருடன் கூட்டணி? தேமுதிகவின் திட்டம் தான் என்ன?

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2026) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம் த... மேலும் பார்க்க

`சில்லறை பசங்களை வைத்துக் கொண்டு, அவமானப்படுத்துகிறார்..!" - அன்புமணி குறித்து மனம் நொந்த ராமதாஸ்

சேலத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியது, "எனக்கு இருக்கிற ஆதங்கத்தை கொட்டி உங்களிடம் பகிர்ந்... மேலும் பார்க்க

பல்லடம்: 1.5 லட்சம் பெண்கள்... கறுப்பு, சிவப்பு டிரெஸ் கோடு; செ.பா-வின் மகளிர் மாநாடு ஏற்பாடுகள்!

2026 சட்டமன்றத் தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் கடந்த காலங்களில் தோல்வியைச் சந்தித்ததால், இந்த முறை திமுக அந்தப் பகுதியில் வெற்றி பெற அதிக கவனம் ச... மேலும் பார்க்க

பாமக: ``என்னை 20 - 30 துண்டுகளாக கூட வெட்டி வீசியிருக்கலாம்" - மேடையில் கண்ணீர்விட்ட ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இதற்கிடையில், சேலத்தில் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று (டிச. 29) காலை தொடங்கி நடைபெற்றுவருகிறத... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: பவார் குடும்பத்தை ஒன்றுசேர்த்த அதானி; சரத்பவாருடன் கூட்டணி சேரும் அஜித்பவார்

சரத்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் நடந்த நிகழ்ச்சியில் அஜித்பவாரும், சரத்பவாரும் தங்களது குடும்பத்தோடு ஒன்றாகக் கலந்து கொண்டனர்.பாராமதியில் முதல் ஏ.ஐ. சென்டர் திறப்பு விழா நடந்தது. இதனை அதானி நிறுவனம்... மேலும் பார்க்க

பாஜக: நயினார் கான்வாய்க்கு கறுப்புக் கொடி காட்டினாரா அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகி? பின்னணி என்ன?

'தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வருகை த... மேலும் பார்க்க