செய்திகள் :

பாரம்பரியத்தின் அழகு, புதுமையின் அனுபவம்! தங்கமயில் ஜுவல்லரியின் சென்னையின் புதிய கிளைகள்!

post image

  சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் வணிக மையங்களான முகப்பேர் மற்றும் புரசைவாக்கத்தில் தங்கமயில் ஜுவல்லரி தனது புதிய கிளைகளை ஆகஸ்ட் 23 அன்று திறந்து, தரம் மற்றும்  பாரம்பரியத்தை  இன்னும் பல குடும்பங்களின் இல்லங்களுக்குக் கொண்டு வந்துள்ளது. 

சென்னையில் 12 கிளைகள், தமிழ்நாடு முழுவதும் 55 கிளைகளோடு,  விரிவடைந்துள்ள தங்கமயில், தனது அடையாளமான நம்பகத்தன்மையையும், தரத்தையும், சென்னை வாடிக்கையாளர்களுக்கு மேலும் அருகில் கொண்டு வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல தலைமுறைகளாக வாடிக்கையாளர்களின் அன்பைப் பெற்று வரும் தங்கமயில், இப்புதிய கிளைகளின் திறப்பு மூலம் சென்னையில் தனது தடத்தை மேலும் வலுவாக்குகிறது.

இக்கிளைகளில், பாரம்பரிய திருமண நகை வடிவமைப்புகள், வெள்ளிப் பொருட்களுடன், விசாலமான காட்சியகம், மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்கும் அனுபவமிக்க பணியாளர்களின் குழுவுடன் இடம்பெற்றுள்ளது.

பாரம்பரிய அழகியலையும் நவீன வசதிகளையும் இணைத்த வடிவமைப்பில் அமைந்த கிளைகளில், திருமண நகைத் தொகுப்பு, அன்றாட அணியக்கூடிய குறைந்த எடை, சமகால நகை வகை, தனித்துவமான தொகுப்புகள், மட்டுமின்றி தங்கமயிலின் சிறப்பு படைப்பான Minmini Diamondsஇன் வைர ஆபரணங்கள் இப்புதிய கிளையில் மிளிர்ந்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறந்த தேர்வுகளை வழங்குகின்றது. 

ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையையும் புரிந்து, அவர்களுக்கு ஏற்ற சிறந்த தேர்வை வழங்கும் சேவையே தங்கமயிலின் தனிச்சிறப்பாகும். இப்புதிய கிளைகளில் குடும்பத்துடன் இணைந்து நகை வாங்கும் அனுபவத்தை மேலும் மகிழ்ச்சிகரமாக மாற்றுகிறது தங்கமயில் ஜுவல்லரி.

சிறந்த, தரமான நகைகள்,  திறன்மிக்க கைவேலைப்பாடடு, தூய்மை உத்தரவாதம், வெளிப்படையான விலை நிர்ணயம், உலகத் தரமான நகைகளை BIS 916 ஹால்மார்க், HUID மற்றும் IAGES தரச்சான்றுதலுடன், எளிமையான பழைய நகை மாற்றுத்  திட்டத்தோடு, 100 ரூபாய் முதல் சேகரிக்க சேமிப்பு திட்டம், ஆகிய வசதிகள்  தங்கமயில் ஜுவல்லரியின் இக்கிளையிலும் தொடர்வதோடு, வாடிக்கையாளரை மையப்படுத்திய சேவைகளுடன், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. 

வாடிக்கையாளர்களை நோக்கிய அர்ப்பணிப்பு:

"முகப்பேர் மற்றும் புரசைவாக்கம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் எங்கள் கிளையைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இப்பகுதி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் தொடர்ந்து பெறுவோம் என்ற உறுதியுடன் செயல்படுகிறோம்" என நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு வருகையும் இனிமையான அனுபவமாக அமைய வேண்டும் என்பதே தங்கமயிலின் நோக்கமாகும். இப் புதிய கிளையின் மூலம், சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, தங்கமயிலில் நகை வாங்கும் அனுபவத்தை  பெற்று தங்கமயில் குடும்பத்துடன் நெருக்கமாவது, மனம் நெகிழும் தருணமாக  நினைவில் நிற்கும். 

தனது புதிய கிளைகளின்  மூலம் சென்னையின் மேலும் பல குடும்பங்களுடன் நீண்டநாள் உறவை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறது.

வாழ்க்கையின் ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தையும் நினைவுகூரும் அழகிய ஆபரணங்களுடன் கொண்டாட விரும்பும் அனைவரையும், தங்கமயில் ஜுவல்லரியின் புதிய கிளைகள் அன்புடன்,  நட்புறவான சேவையுடனும் அனைவரையும் வரவேற்கிறது. 

தங்கமயிலின் இக்கிளைகள், சென்னையின் நகை வாங்கும் அனுபவத்தில் புதிய முத்திரையை பதிக்கத் தயாராக உள்ளது.

தங்கம் வாங்க, தங்கமயிலுக்கு வாங்க!

`ஒரு எருமை மாட்டுக்கு உரிமை கோரும் இருவர்' - உரிமையாளரை முடிவு செய்ய டி.என்.ஏ. சோதனை

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் அட்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுர் என்ற கிராமத்தில் ஒரு எருமை மாட்டிற்கு இரண்டு பேர் உரிமை கோருவதால் பிரச்னை போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. இதே பகுதியை சேர்ந்த ச... மேலும் பார்க்க

திருடுபோன Grey Parrot; கைகொடுத்த மைக்ரோசிப் - 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிடைத்த செல்லக் கிளி!

இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் மோர்டிமர் என்பவர், தனது செல்லக் கிளியான ‘பார்னி’யை Grey parrot 9 ஆண்டுகளுக்கு முன்பு பறிகொடுத்தார். 2017-ம் ஆண்டு அவரது வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தின் போது, வீட்டில்... மேலும் பார்க்க

`மராத்தி கட்டாயம்' - ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தால் மும்பை மக்கள் பாதிப்பு

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் லட்சக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சிகள் இயக்கப்படுகின்றன. மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் அதிக அளவில் ஆட்டோ மற்றும் டாக்சியை வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இயக்குவதாக ... மேலும் பார்க்க

துகாராம் முண்டே: அதிரடி ரெய்டுகளுக்கு பெயர் பெற்றவர்; நாற்காலித் துணியை அகற்றியதால் மீண்டும் வைரல்!

மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்புத் துறையில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி துகாராம் முண்டே, தற்போது மற்றொரு நிகழ்வுக்காகச் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளார். செய்தியாளர் சந்... மேலும் பார்க்க

Miss Universe India 2026: ``மூன்றாண்டுக்கால உழைப்புக்குக் கிடைத்தது..!" - காசியா லிஸ் மேஜோ பேச்சு!

ஜெய்ப்பூரில் உள்ள ஜீ ஸ்டுடியோஸில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) Miss Universe India 2026-பிரமாண்ட இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா முழுவதிலும் இருந்து 52 பேர் இறுதிப் போட்டியாளர்களாகப்... மேலும் பார்க்க

ஓணம்: கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் குவிந்த பல டன் பூக்கள்; களைகட்டிய பூக்கள் விற்பனை! | Album

ஓணம் பண்டிகை: கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் குவிந்த பல டன் பூக்கள்! களைகட்டிய பூக்கள் விற்பனை.! மேலும் பார்க்க