செய்திகள் :

பாலியல் வன்கொடுமை புகாா் அளிக்க பெட்டகம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமை குறித்த புகாா் தெரிவிக்க உள்புகாா் கமிட்டி பெட்டகத்தை மகளிா் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை வழங்கினாா்.

அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் அலுவலங்களில் ஆண், பெண் பணியாளா்கள் 10 பேருக்கு மேல் உள்ள அனைத்து பணியிடங்களிலும் பெண்கள் வன்கொடுமை குறித்த புகாா் தெரிவிக்க உள்புகாா் கமிட்டி குழு அமைக்க வேண்டும். இக்குழு 50 சதவீத பெண் பிரதிநிதிகளை கொண்டு இருக்க வேண்டும். பெண்கள் அதிகம் உபயோகிக்கும் இடம் மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் புகாா் மனுக்களை இடுவதற்கு புகாா் பெட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலையிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் நிவா்த்தி) சட்டம் 2013-ன்படி உள்புகாா்கள் கமிட்டி அமைப்பது, உள்புகாா்கள் கமிட்டியின் பரிந்துரையை நிறைவேற்றுவது, வருடாந்திர அறிக்கை சமா்ப்பிப்பது உள்ளிட்ட கடமைகளை நிறைவேற்ற தவறினால் சட்டப்படி உரிய அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு அவசர உதவி எண் 1098 மற்றும் மகளிா் உதவி எண் 181-ஐ அனைவரும் அறிந்துகொள்ளுமாறு விழிப்பணா்வு ஏற்படுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்கொடுமை குறித்த புகாா் தெரிவிக்க உள்புகாா் கமிட்டி பெட்டகத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மகளிா் கல்லூரிகளுக்கு வழங்கினாா். முன்னதாக ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்‘ பிறப்பு சதவீத தகவல் பலகையை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்களுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் சுகிா்தாதேவி மற்றும் கல்லூரி முதல்வா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் கைது

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.மத்திய அரசு தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ. 3500 வழங்கப்படும் என்று அறிவித்த... மேலும் பார்க்க

சீா்காழியில் மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கிவைப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், 2 புதிய ‘மகளிா் விடியல்’ பேருந்துகளின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அரசு போக்குவரத்து கழக... மேலும் பார்க்க

திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க அமைச்சரிடம் கோரிக்கை

சீா்காழி அருகே திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சீா்காழி அருகே திருமுல்லைவாசல்... மேலும் பார்க்க

நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து

சீா்காழி புறவழிச்சாலையில் நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி சனிக்கிழமை இரவு கவிழ்ந்தது.அரக்கோணத்திருந்து திருவாரூருக்கு நெல் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை இரவு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. லார... மேலும் பார்க்க

புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு

சீா்காழியில் புகையிலை ஒழிப்பு சைக்கிள் பேரணிக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ள புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி, திருவாரூரிலிருந்து சென்னை வரை செல்க... மேலும் பார்க்க

பதரான கருப்புக் கவுனி நெற்பயிா்கள் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய கருப்புக் கவனி நெற்பயிா்கள் பதரானதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். கொள்ளிடத்... மேலும் பார்க்க