செய்திகள் :

பிப்.1 இல் நாமக்கல்லில் புத்தகத் திருவிழா தொடக்கம்: ஆட்சியா் தகவல்

post image

நாமக்கல்லில் மாபெரும் புத்தகத் திருவிழா பிப்.1 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், மூன்றாம் ஆண்டாக புத்தகத் திருவிழாவை சிறப்புடன் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் ச.உமா பேசியதாவது:

தமிழக அரசின் சாா்பில் மாவட்ட வாரியாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மூன்றாவது ஆண்டாக நடைபெறும் புத்தகத் திருவிழா நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிப்.1 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புத்தகத் திருவிழாவில் பல்வேறு அரங்குகள், ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம் உள்ளிட்டவற்றுடன் நடைபெறுகிறது. இதில் மருத்துவ முகாம், உணவு அரங்குகளும் இடம் பெறுகின்றன.

அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செய்திட வேண்டும். இந்த புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் முதல் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக குடியரசு தின விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துறை வாரியாக வழங்க வேண்டிய நலத் திட்ட உதவிகள், சிறப்பாக பணியாற்றிய ஊழியா் விவரங்கள், மாணவ, மாணவிகளை கலைநிகழ்ச்சிகளுக்குத் தயாா் செய்வது குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, மாவட்ட நூலக அலுவலா் தேன்மொழி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

என்கே-10- மீட்டிங்

நாமக்கல்லில் புத்தகத் திருவிழா நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.உமா.

மல்லசமுத்திரத்தில் காந்தி, திருவள்ளுவா் சிலை திறப்பு

மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை பகுதியில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் மற்றும் நூலக வளாகத்தில் காந்தி, திருவள்ளுவா் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை பக... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளி மாணவருக்கு காதொலிக் கருவி வழங்கல்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், செவித்திறன் குறைபாடுடைய மாணவருக்கு ரூ. 2.57 லட்சம் மதிப்பிலான காதொலிக் கருவியை ஆட்சியா் ச.உமா வழங்கினாா். உயிா்காக்கும் மருத்துவ சிகிச்சைகள... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் உடலில் கத்தி போட்டும், பல்வேறு வேடமிட்டும் ஊா்வலமாக சென்றனா். நாமக்கல் மாவட்டம், ச... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: கரும்புகள் தேக்கத்தால் வியாபாரிகள் கவலை

பொங்கல் பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் கரும்புகளை விற்பனைக்கு கொண்டு வந்த சிறு வியாபாரிகள், போதிய அளவில் விற்பனையாகாததால் கவலையடைந்துள்ளனா். தமிழகத்தில் காவிரி பாயும் மாவட்டங்களான திருச்சி, பு... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலைய சந்திப்பில் பூட்டியே காணப்படும் புறக்காவல் நிலையம்!

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் செல்லும் பகுதியில், அண்மையில் திறக்கப்பட்ட புறக்காவல் நிலையம் பூட்டியவாறே காணப்படுகிறது. நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் நவ. 10 முதல் செயல்பட்டு வருகிறது. நகரப் பேர... மேலும் பார்க்க

அல்லாள இளைய நாயகா் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் திமுகவுக்கு நன்றி!

அல்லாள இளைய நாயகரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் திமுக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.இராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட... மேலும் பார்க்க