செய்திகள் :

துணைவேந்தர் நியமன வழக்கு; உயர் நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

post image

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டத்தை நிறைவேற்றி இருந்தது.

இந்தச் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், இந்த தடையை நீக்கி தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்த தமிழக அரசு, அதனை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தது.

மு. க ஸ்டாலின்
மு. க ஸ்டாலின்

இந்தச் சட்டத்திருத்தம் உட்பட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தன. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது. அந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கலாம் என்ற சட்டத்திருத்தமும் அடங்கும்.

இதனைத் தொடர்ந்து மாநில முதல்வரே துணைவேந்தர்களை நியமிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் இந்தச் சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முழுமையாக விசாரிக்காமல் அவசரக்கோலத்தில் இடைக்கால தடை விதித்துள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று ( பிப்.4) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்கி இருக்கிறது.

தடையை நீக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். ஆறு வாரங்களில் வழக்கை விசாரித்து முடிக்கவும், அதுவரை புதிய துணைவேந்தர்களை நியமிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

TVK:``பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிதான்" - மீண்டும் அதிமுக-வை சீண்டிய தவெக!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்தார். அப்போது த.வெ.க தலைவர் குறித்து கேள்வ... மேலும் பார்க்க

"6 நாட்களில் என்ன நடந்தது? ஏன் மோடி விரிவாகப் பேச மறுக்கிறார்?"- வர்த்தக ஒப்பந்தம் குறித்து ரகுபதி

இந்தியா - அமெரிக்கா வரி ஒப்பந்தம் குறித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதில், " நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் ப... மேலும் பார்க்க

ஊடகவியலாளர் மீது தாக்குதல்: 'இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறிவது உறுதி' - விஜய் கண்டனம்

கரூரில் குவாரி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம், தொடர்பாகத் தவெக தலைவர் விஜய் அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக... மேலும் பார்க்க

`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. அதில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் உரையாற்றினார். மாநிலங்கள... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு நிதி ஒதுக்காததற்கு காரணம் இதுதான்!’ - முதல்வர் ஸ்டாலின் கூறிய விளக்கம்

விழுப்புரம் மாவட்டம், கொள்ளார் கிராமத்தில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பயன்கள் வழங்குதல், என் கனவு என் எதிர்காலம் என்ற இணையத்தளம் துவக்குதல் மற்றும் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் விழா இன்று நடை... மேலும் பார்க்க

India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை' | இனியன் ராபர்ட் | களம் 01

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க