செய்திகள் :

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

post image

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், தொகுதி மறுவரையறை நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு இடையிலும், தமிழகத்திற்கு வரவிருக்கும் ஒரு மிகப்பெரிய பேராபத்து குறித்து எச்சரிக்க வேண்டியது எனது கடமை. ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், 'தொகுதி மறுவரையறை' தொடர்பான அரசியல் சட்டத் திருத்தத்தை 'புல்டோசர்' வேகத்தில் நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னதை ஏற்று, அதைக் கட்டுக்கோப்பாகச் செயல்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. ஆனால், சொன்னதைச் சரியாகச் செய்ததற்காகவே இன்று தமிழகத்தின் அரசியல் வலிமையைக் குறைத்து தண்டனை வழங்க ஒன்றிய அரசு துடிக்கிறது.

தென்மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படாது எனப் பிரதமர் நாடாளுமன்றத்தில் இதுவரை உத்தரவாதம் அளிக்கவில்லை. இது குறித்து முறையிட நேரம் கேட்ட தமிழக எம்.பி-க்களுக்குப் பிரதமரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் கேள்விகளுக்கும் பதிலே இல்லை. மறைமுகமாகத் திட்டமிடப்படும் இந்தச் சட்டத் திருத்தம் மாநில உரிமைகளைப் படுகொலை செய்யும் செயல் மட்டுமன்றி, அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்.

தமிழகத்தைப் பாதிக்கும் வகையிலோ அல்லது வட மாநிலங்களுக்குப் கூடுதல் அரசியல் வலிமையை வாரி வழங்கும் வகையிலோ ஏதேனும் நடந்தால், தமிழகம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்; ஒவ்வொரு குடும்பமும் வீதிக்கு வந்து போராடும். தமிழக முதலமைச்சராக எனது தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். தேர்தல் நேரம் என்பதால் எங்களது கவனம் திரும்பாது என நினைக்க வேண்டாம். இது வெறும் மிரட்டல் அல்ல. தமிழ்நாட்டின் எச்சரிக்கை.

திராவிட முன்னேற்ற கழகம் என்பது வெறும் தேர்தல் கட்சி அல்ல, அது ஒரு கொள்கை இயக்கம். மாநில உரிமைகளைப் பறிக்க நினைத்தால், 50 மற்றும் 60-களிலிருந்த பழைய ஆவேசமான தி.மு.க-வை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டி இருக்கும். சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் அவர் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், தமிழகம் பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைப்போம். இது பிரதமர் மோடிக்குத் தமிழ்நாட்டிலிருந்து விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் என்ன?

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய விஜய் சில வாக்குறுதிகளை அறிவித்தார்.விஜய் பேசியதாவது, 'நாளை மறுநாள் நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளை புத்... மேலும் பார்க்க

பீகார் அரசியலில் புதிய சகாப்தம்: முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சவுத்ரி - பின்னணி என்ன?

பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த நிதிஷ் குமாரின் ஆட்சி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க-வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பதவியேற்க உள்ளார். இதன் மூலம், பீகார் மாநில ... மேலும் பார்க்க

'டார்கெட் 1 லட்சம் வாக்குகள்!' - பெரம்பூரில் வெல்வாரா விஜய்? |களநிலவரம் ஓர் அலசல்!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், பெரம்பூரில் விஜய்யை 1 லட்சம் வாக்குகள் பெற வைப்போம் என டார்கெட் நிர்ணயித்து தொகுதிக்குள் தவெகவினர் பணியாற்ற... மேலும் பார்க்க

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ - வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பரப்புரைக்காக வேலூருக்கு வந்திருக்கிறார். இன்று மாலை 5 மணியளவில், சென்னை-பெங்க... மேலும் பார்க்க