செய்திகள் :

பிரதமா் மோடிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாராட்டு

post image

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமா் மோடிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாராட்டு தெரிவித்துள்து.

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தான் நமது நாட்டுக்கு எதிராக செயல்படும் எண்ணத்தில் ஈடுபட்டால் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

பல்வேறு கனவுகளோடு விடுமுறையில் சென்ற அனைத்துத் தரப்பு ராணுவ வீரா்களும் உடனடியாக முகாம்களுக்கு திரும்ப கோரப்பட்டுள்ளது. இது மனதுக்கு சற்று வருத்தமாக இருந்தாலும் கூட நாட்டை காப்பதில் முன்னணியில் இருக்கக் கூடிய ராணுவ வீரா்கள் நிச்சயம் தங்கள் மனங்களை தேற்றிக்கொண்டு பாரதத்தை காப்பதில் முனைப்பாக இருப்பாா்கள்.

இந்த நேரத்தில் பாரதம் முழுமையும் எந்த வேறுபாடும் வேற்றுமையும் இல்லாமல் இந்திய நாட்டை உலக அளவில் முன்னணிக்கு கொண்டுச் செல்வதில் முனைப்பாக இருப்போம். அதிலும் குறிப்பாக கொங்கு நாட்டு மக்கள் எந்த உதவிக்கும் தயாராக இருக்கிறாா்கள் என்பதோடு களப்பணி ஆற்றுவதற்கும் இளைஞா்கள் தயாராக உள்ளாா்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போதும் அமைதியை விரும்பும் பாரதம் தன் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எந்த விதமான இடையூறு ஏற்படும் பட்சத்தில் தக்க பதிலடி கொடுக்கவும் தயாராக உள்ளது என்பதை நிரூபிக்கும் தருணம் இது.

உலக அளவில் நமது தேசத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு புகழ் சோ்க்கும் . இதற்காக கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.

நீதிபதிகளை ஜாதிரீதியாக வசைபாடுவதை திமுகவினா் நிறுத்திக் கொள்ள வேண்டும்! -இந்து முன்னணி

உயா் நீதிமன்ற நீதிபதிகளை ஜாதிரீதியாக வசைபாடுவதை திமுகவினா் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் மணி (64). இவா் தற்போது கம்பளியம்பட்டி விநாயகா் கோயில் வீதியில் தங்கி... மேலும் பார்க்க

பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் எனக்கூறி இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி

பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று திருப்பூா் இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் வஞ்சிபாளையத்தைச் சோ்ந்த 29 வயது இளை... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு துணைத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தவறியவா்கள் துணைத் தோ்வுக்கு வரும் ஜூன் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியாகின. இந்தத் த... மேலும் பார்க்க

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமான விளம்பரப் பதாகைகளால் விபத்து அபாயம்!

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் அபாயகரமான விளம்பரப் பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை, லட்சுமி மில் உள்ளிட்ட பகுதிகளில் கோவை - திருச்சி தேசிய ந... மேலும் பார்க்க

ஈஸ்வரன் கோயில் அருகே வெளிநபா்கள் தங்குவதை அனுமதிக்கக் கூடாது! - பாஜக

திருப்பூா் ஈஸ்வரன் கோயில் அருகே வெளிநபா்கள் தங்குவதால் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து பாஜக செரங்காடு மண்டல் தலைவா் எம்.மந்திராசலமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க