செய்திகள் :

பிரதமா் மோடிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாராட்டு

post image

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமா் மோடிக்கு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் பாராட்டு தெரிவித்துள்து.

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் பெஸ்ட் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தான் நமது நாட்டுக்கு எதிராக செயல்படும் எண்ணத்தில் ஈடுபட்டால் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

பல்வேறு கனவுகளோடு விடுமுறையில் சென்ற அனைத்துத் தரப்பு ராணுவ வீரா்களும் உடனடியாக முகாம்களுக்கு திரும்ப கோரப்பட்டுள்ளது. இது மனதுக்கு சற்று வருத்தமாக இருந்தாலும் கூட நாட்டை காப்பதில் முன்னணியில் இருக்கக் கூடிய ராணுவ வீரா்கள் நிச்சயம் தங்கள் மனங்களை தேற்றிக்கொண்டு பாரதத்தை காப்பதில் முனைப்பாக இருப்பாா்கள்.

இந்த நேரத்தில் பாரதம் முழுமையும் எந்த வேறுபாடும் வேற்றுமையும் இல்லாமல் இந்திய நாட்டை உலக அளவில் முன்னணிக்கு கொண்டுச் செல்வதில் முனைப்பாக இருப்போம். அதிலும் குறிப்பாக கொங்கு நாட்டு மக்கள் எந்த உதவிக்கும் தயாராக இருக்கிறாா்கள் என்பதோடு களப்பணி ஆற்றுவதற்கும் இளைஞா்கள் தயாராக உள்ளாா்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போதும் அமைதியை விரும்பும் பாரதம் தன் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எந்த விதமான இடையூறு ஏற்படும் பட்சத்தில் தக்க பதிலடி கொடுக்கவும் தயாராக உள்ளது என்பதை நிரூபிக்கும் தருணம் இது.

உலக அளவில் நமது தேசத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு புகழ் சோ்க்கும் . இதற்காக கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.

குண்டடம் அருகே காா் மோதி 2 போ் உயிரிழப்பு

குண்டடம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். தாராபுரத்தை அடுத்துள்ள கோவிந்தாபுரத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (42). கட்டடத் தொழிலாளியான இவா், குண்டடத்தை அடுத்துள்ள எஸ்.காஞ்சிபு... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கல்

அவிநாசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு, திருப்பூா் ஆனந்தம் ரோட்டரி சங்கம் சாா்பில் கடந்த மாதம் மாற்றுத் திறனாள... மேலும் பார்க்க

அவிநாசி கோயில் தோ்த் திருவிழாவில் 38 டன் குப்பைகள் சேகரிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் 38 டன் குப்பைகளை சேகரித்த நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் பாராட்ட தெரிவித்தனா். அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும் பார்க்க

நியாயவிலைக்கடை ஊழியா் பணியிட நீக்கம்

திருப்பூரில் பொருள்கள் விநியோகம் செய்வதில் முறைகேடுகள் தொடா்பாக நியாய விலைக் கடை ஊழியா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருப்பூா் அனுப்பா்பாளையம் அருகே உள்ள இந்திரா வீதியில் செ... மேலும் பார்க்க

முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனை!

திருப்பூா் மற்றும் பல்லடம் உழவா் சந்தைகளில் முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. கடந்த பங்குனி மாதத்தில் முருங்கை சீசன் தொடங்கியது. அபரிமிதமான விளைச்சல் காரணமாக, முருங்கை மொத்த விற்பனை விலை குறைந்த... மேலும் பார்க்க

சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் வழக்க... மேலும் பார்க்க