செய்திகள் :

பிரபலமாகும் ``Are you dead?" செயலி: சீனாவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை! - என்ன காரணம்?

post image

நவீன உலகில் முதியவர்களும், தனிமையில் வசிப்பவர்களும் ``நாம் இறந்து போனால் அதை யார் அறிவார்கள்?" என்ற அச்சத்தை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் "தனிமை மரணங்கள்" (Lonely Deaths) பெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளன.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக சீனாவின் செங்சோவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சீனாவில் "சி-லே-மா" (Si Le Ma - Are you dead?) என்ற செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். "நீங்கள் இறந்துவிட்டீர்களா?" என்று நேரடியாகப் பொருள் தரும் இந்தப் பெயரைக் கொண்ட செயலி, 2026-ம் ஆண்டில் சீனாவின் கட்டணச் செயலிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதே நேரம், அந்நாட்டு இணையதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தனிமை
தனிமை

இந்த ஆப்பை டவுன்லோடு செய்யும் பயனர்கள், தங்களுக்கு நெருக்கமான ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை 'அவசரத் தொடர்பு' (Emergency Contact) எண்ணாகப் பதிய வேண்டும். பயனர் தினமும் இந்தச் செயலிக்குள் சென்று, தான் நலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை, பயனர் தொடர்ந்து இரண்டு நாள்களுக்குச் செயலிக்குள் வராமல் இருந்தால், அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பதைச் சரிபார்க்கும்படி அந்த அவசரத் தொடர்பு நபருக்குச் செயலி தானாகவே மின்னஞ்சல் அனுப்பிவிடும்.

சீனாவில் மிகவும் பிரபலமான "ஈ-லே-மா" (உங்களுக்குப் பசிக்கிறதா?) என்ற உணவு விநியோகச் செயலியின் பெயரைப் போலவே, "சி-லே-மா" என்று பெயரிடப்பட்டிருக்கிறது. மரணத்தை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் வாழ்க்கையின் மதிப்பை உணர வைக்கும் என இதன் உருவாக்குநர்களில் ஒருவரான லியூ தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, தற்போது சுமார் 1.15 டாலர் (சுமார் 8 யுவான்) கட்டணத்தில் கிடைக்கிறது.

 ஆப்
ஆப்

ஒரு வருடத்தைக்கூட நிறைவு செய்யாத இந்தச் செயலி, சீனாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளதற்குக் காரணம், அங்கு அதிகரித்து வரும் தனிமைதான் எனச் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். தொழில்நுட்பம் என்பது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல, மனிதர்களின் அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் வாழ்வின் இறுதிக்கணங்கள் கண்ணியமாக இருப்பதை உறுதி செய்யவும் உதவும் என்பதற்கு இந்தச் செயலி ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது என்றப் பாராட்டும் பெற்றிருக்கிறது.

``ஆண்கள் அணைவரையும் சிறையில் அடைத்துவிடலாமா?" - விமர்சிக்கப்படும் நடிகை ரம்யாவின் பதிவு!

நாய்கள் மீது அன்பு கொண்டவர்களும், நாய்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கச் சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் என வாதிடுபவர்களும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீத... மேலும் பார்க்க

``ஸ்மார்ட் போன், ஆஃப் பேன்ட் அணியத் தடை; பைஜாமா அணிய வேண்டும்" - உ.பி கிராமங்களின் முடிவு!

ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள 15 கிராமங்கள் சிறுமிகளுக்கு ஸ்மார்ட்போன்களுக்குத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த கிராமங்களுக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொ... மேலும் பார்க்க

``நாளையுடன் உலகம் அழியப்போகிறது" - தீவிரமாக கப்பல் கட்டும் எபோநோவா?: யார் இவர்? என்ன சொல்கிறார்?

இஸ்லாம் குர்ஆனிலும், கிறிஸ்தவம் பைபிலிலும் நூஹ் - நோவா என்பவரின் சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறது. உலகை அழிக்க நினைத்த இறைவன் இவர் மூலம் நல்லவர்களை காப்பாற்றி இந்த உலகை மீளுறுவாக்கம் செய்ததாக அந்த சம... மேலும் பார்க்க

"நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும்" - லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு: தனி ஒருவனாக போராடி பலரை காப்பாற்றிய பழக்கடைகாரர் - யார் அந்த ஹீரோ?

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் அமைந்துள்ளது பான்டி (Bondi) கடற்கரை. யூதர்களின் விழாவான ஹனுக்காவை (Hanukkah) கொண்டாட பான்டி கடற்கரையில் சுமார் 1,000 முதல் 2,000 பேர் ... மேலும் பார்க்க

Lionel Messi: ராகுல் காந்திக்கு மெஸ்ஸி கொடுத்த கிஃப்ட் - வைரலாகும் வீடியோ!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 'G.O.A.T. Tour' (Greatest Of All Time Tour) என்ற பெயரில் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கொல்கத்தா, அகமதா... மேலும் பார்க்க