செய்திகள் :

பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை; மும்பையில் அதிர்ச்சி!

post image

இந்தி சின்னத்திரையில் குங்கும் பாக்யா மற்றும் வாக்லே கி துனியா போன்ற டிவி தொடர்கள் மூலம் பிரபலம் அடைந்தவர், நடிகை சஞ்சிதா உகாலே (30). இவர் மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள நாலாசோபாராவில் வசித்து வந்தார். அவருடன் அவரது பெற்றோர் மற்றும் சகோதரியும் வசித்து வந்தனர். அவரது பெற்றோர் மற்றும் சகோதரி வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது சஞ்சிதாவின் படுக்கை அறை உள்பக்கமாக அடைக்கப்பட்டு இருந்தது. கதவைத் தட்டிய பிறகும் திறக்கப்படவில்லை.

இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் துணையோடு கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே சஞ்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனையில் அவர் உயிர் பிரிந்தது உறுதி செய்யப்பட்டது.

நடிகை சஞ்சிதா உகாலே

இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சஞ்சிதாவின் அறையைச் சோதித்துப் பார்த்தபோது, எந்த விதக் கடிதமும் சிக்கவில்லை. என்ன காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றன்றர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தையை நாள்தான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு ரீல்ஸ் காணொலி வெளியிட்டு இருந்தார். சஞ்சிதாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சஞ்சிதா தொலைக்காட்சி தவிர படங்களிலும் நடித்துள்ளார். அவர் விக்கி கௌஷல் நடித்த சாவாவில் தாராபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே நிகழ்ச்சியில் சுகூன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சஞ்சிதாவின் மரணம் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு சஞ்சிதா இளைய சமுதாயத்தினர் தற்கொலை செய்து கொள்வது குறித்து வருத்தம் தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது அவரே அந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 வயது சிறுமி உயிரிழப்பு; கொதித்தெழுந்த கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள சிறுபுழல்பேட்டை கிராமத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரின் மூன்று வ... மேலும் பார்க்க

ஈரோடு: மதுபோதையில் லாரியால் மோதிச் சென்ற ஓட்டுநர் - துரத்திச் சென்று பிடித்த துணிச்சல் பெண்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒருவர், நேற்று மாலை ஸ்கூட்டியில் சென்றுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா சந்திப்பு அருகில் சென்றுக் கொண்டிருக்கையில், பின்னால் வந்த லாரி ஒன்று பெண்ணின் ஸ்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் 3 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பீகாரை சேர்ந்த ஒருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ளது சிப்காட் பகுதி ஒன்று. அங்கு நேற்று மாலை ஒரு வட மாநிலத் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் சென்றுள்ளது. அந்தக் குழந்தையை சிப்காட் பகுதி முழுவதும் தே... மேலும் பார்க்க

சேலம்: பென்டிரைவ் முழுக்க பெண்களின் நிர்வாண வீடியோக்கள்; தவெக நிர்வாகி குறித்து அதிர்ச்சிப் பின்னணி

சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த த‌.வெ.க நிர்வாகி மணிகண்டன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஏமாற்றிப் பழகி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங... மேலும் பார்க்க

மதுரையில் சிங்கப்பெண் சிறப்புப் படையின் முதல் வழக்கு; மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியில் நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க