செய்திகள் :

பிரிட்டன் டு கொல்லம்; மனைவியின் அந்தரங்க வீடியோவை ஆபாச தளத்தில் பதிவிட்ட நபர் - கைதுசெய்த போலீஸ்!

post image

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டியம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரிட்டனில் வேலை செய்துவந்தார். அவர் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் பிரிட்டனில் வசித்துவந்தார். இதற்கிடையே ஊருக்கு குடும்பத்துடன் வந்த அவர் மீது அவரது மனைவி கொட்டியம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.​ பிரிட்டனில் வசித்து வந்த காலகட்டத்தில் தனது அந்தரங்கக் காட்சிகளைப் படம் பிடித்து ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியதாக அந்த புகாரில் அவரது மனைவி தெரிவித்திருந்தார். அதுமட்டும் அல்லாது அவர் சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகும் மனைவியுடன் தனியாக இருக்கும் வீடியோவை பதிவுசெய்ய முயன்றுள்ளார். 2026 ஜூன் 2 அன்று காப்பில் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, மனைவியிடம் நெருக்கமாக இருப்பதை ரகசியமாக வீடியோ எடுக்க முயன்றுள்ளார். இதுகுறித்து கேட்டபோது மனைவியை அவர் தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், தம்பதியரின் 4 வயது மகளின் முன்பாக அவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதும் அம்பலமானது.

கொல்லம் மாநகர போலீஸ் ஆணையர் ஹேமலதா

இதனையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கொட்டியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்தனர். வழக்குகள் பதியப்பட்டதைத் தொடர்ந்து அந்த இளைஞர் தலைமறைவானார். கொல்லம் மாநகர காவல் ஆணையர் ஹேமலதா உத்தரவின்பேரில், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர்.

ஆபாச வீடியோ எடுத்த கணவன்

இது குறித்து கொல்லம் மாநகர காவல் ஆணையர் ஹேமலதா ஐ.பி.எஸ் கூறுகையில், "பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைது செய்யப்பட்ட இளைஞரின் செல்போனில் உள்ள டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். டிஜிட்டல் தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர வேண்டும்" என்றார்.

தமிழர்கள் மீது நடத்தப்பட்டது போலி என்கவுண்டர்தான் - அதிர்ச்சி அளிக்கும் உடற்கூறாய்வு அறிக்கை!

"மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது போலி என்கவுண்டர்தான்" என்பதை உடற்கூறாய்வு அறிக்கை தெரிவிப்பதாக, கர்நாடக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பலூன் ஊதும்போது தொண்டையில் சிக்கி விபரீதம்; 6 வயது சிறுவன் பலியான துயரம்!

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள பச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரம் செய்யும் தம்பதி குமார் - சத்யா. இவர்களுக்கு 6 வயதில் சோம்நாத், சேஸ்நாத் என்று இரட்டையர் உட்பட மூன்று மகன்க... மேலும் பார்க்க

ஆவடி: திருமணம் மீறிய நட்பு; பூட்டிய வீட்டுக்குள் பெண் கொலை - முதியவர் சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள கர்லபாக்கம், யாதவர் தெருவைச் சேர்ந்தவர் லதா (45). இவர் கர்லபாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் சில நாள்களாக வேலைக்குச் செல... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: சிசிடிவி-யில் ஸ்பிரே பெயின்ட்; ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே உள்ள புதுப்பேர் பகுதியில் தனியார் ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு அதிகாலை நேரத்தில் நுழைந்த ஒரு கும்பல், கேஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்க... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

திருவள்ளூர் அருகே சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி என்கிற ரூபன் (33). இவர், குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றவர். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். அதனால் வெங்கல் காவல் நில... மேலும் பார்க்க

நெல்லை: சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்த தூத்துக்குடி சிறை வார்டன்; சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். நெல்லை சிறையில் வார்டனாகப் பணிபுரிந்தார். கஞ்சா வழக்குகளில் சிக்கிய கைதிகளுடன் அவர் நெருக்கமாகப் பழகி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்... மேலும் பார்க்க