புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தில் சிவாஜியின் (62) மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அந்த மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, 42 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், சிவாஜியை கைது செய்தனா். மேலும் இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.