செய்திகள் :

புதிய பேருந்துச் சேவை: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடங்கி வைப்பு

post image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், சின்னவெண்மணி கிராமத்துக்கு வழித்தடம் நீட்டிப்பு செய்து, செட்டிக்குளம் மற்றும் லப்பைகுடிகாடு பகுதிகளுக்கு 2 நகர புதிய பேருந்துகளும், அரியலூரிலிருந்து நாகல்குழி கிராமத்துகு புதிய பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் கொடியசைத்து வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகம் மற்றும் குன்னத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். அமைச்சா் சா.சி. சிவசங்கா், சின்ன வெண்மணி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீா்வு காணும் வகையில், புதிய நகரப் பேருந்து வழித்தடத்தை நீட்டிப்பு செய்து அரியலூா் - திட்டக்குடி வரை செல்லும் வகையிலும், பெரம்பலூா் முதல் செட்டிக்குளம் வரையிலும், பெரம்பலூா் முதல் லப்பைகுடிகாடு வரையிலும், அரியலூா் முதல் நாகல்குழி கிராமம் வரையிலும் என 3 வழித்தடங்களுக்கும் புதிய பேருந்துச் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந் நிகழ்ச்சிகளில், கும்பகோணம் மண்டல போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநா் இரா. பொன்முடி, அட்மா தலைவா்கள் வீ. ஜெகதீசன், சி. ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் அம்பிகா ராஜேந்திரன், திருச்சி மண்டலப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் முத்துகிருஷ்ணன், கோட்ட மேலாளா் புகழேந்திராஜ், வேப்பூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அறிவழகன், வட்டாட்சியா்கள் சரவணன் (பெரம்பலூா்), கோவிந்தம்மாள் (குன்னம்) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வின்சென்ட் தே பால் சபை கிளை ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் புனித பனிமய மாதா திருத்தலத்தில் வின்சென்ட் தே பால் சபை புதிய கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வின்சென்ட் தே சபை ஆலோசனைக் கூட்டத்துக்கு, பங்குத் தந்தை சுவைக்கின் தல... மேலும் பார்க்க

ரூ. 28 லட்சம் மோசடி: பெட்ரோல் விற்பனை; நிலைய மேலாளா் கைது

பெரம்பலூா் அருகேயுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ரூ. 28 லட்சத்தை மோசடி செய்த, அதன் மேலாளரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் மரு... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஒன்றியத்தில் 186 வீடுகள் கட்ட ரூ. 6.51 கோடி நிதி ஒதுக்கீடு

பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 வீடுகள் கட்டுவதற்கு ரூ. 6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். பெரம்பலூா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளில் துண்டுப் பிரசுரம் ஒட்டிய பாஜகவினா் 4 போ் கைது

பெரம்பலூா் நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் முதல்வா் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரம் ஒட்டிய, பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த 4 பேரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாரதிய ஜனதா கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவ... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 4 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூ... மேலும் பார்க்க