செய்திகள் :

``புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது'' - கொதிக்கும் புதுக்கோட்டை மாநகர திமுகவினர்... பின்னணி என்ன?

post image

புதுக்கோட்டை மாநகர தி.மு.க செயலாளராக இருந்த அமைச்சர் ஆ.செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கே.என்.நேரு ஆதரவாளராக இவர் இருந்து வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அந்த பதவிக்குக் கட்சியின் சீனியர்கள், இளைஞர்கள் எனப் பலரும் முயற்சித்ததோடு, அந்த பதவியை பெறுவதற்காக கட்சித் தலைமையை அணுகி வந்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய அமைச்சர் நேரு, மறைந்த மாநகரச் செயலாளர் செந்திலின் மகனுக்கு மாநகரச் செயலாளர் பதவி கிடைக்க அனைவரும் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாகச் சொல்லப்பட்டது.

அமைச்சர் துரைமுருகன்

இதற்குக் கட்சி நிர்வாகிகள் பலரும் தலையசைத்தாலும், மறைமுகமாக இந்தப் பதவியை எதிர்பார்த்திருந்த பலரும் அதற்காக தலைமையிடம் தனித்தனியாக முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவின் ஆதரவாளரான, தி.மு.க புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஷ் என்பவரை புதுக்கோட்டை மாநகர பொறுப்பாளராக நியமனம் செய்வதாக தி.மு.க மாநில பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்தார்.

இந்நிலையில், 'அவர் கட்சிக்காக உழைக்கவில்லை. உண்மையாக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை. அதனால், அவரை மாற்ற வேண்டும்' என்று கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை மாற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுப்பட்டனர். இந்நிலையில், புதுக்கோட்டை திலகர் திடலில் நடத்துவதாக இருந்த தி.மு.க பொதுக்கூட்டம் மழை காரணமாக ஒரு தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்டது.

rajesh

தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடைப்பெற்ற அந்த கூட்டத்தில் புதிய மாநகரப் பொறுப்பாளர் ராஜேஷூம் கலந்து கொண்ட நிலையில் அங்கிருந்த மாநகர வட்டச் செயலாளர்கள் பலரும் எழுந்து, 'புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது' என்று கூறி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், 'ராஜேஷை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள் யாருக்கேனும் ஒருவருக்கு பதவி வழங்க வேண்டும். இல்லையென்றால், தொடர்ந்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்வோம்' என்று வட்டச் செயலாளர்கள் சூளுரைத்திருப்பதோடு, ராஜேஷூக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார். இந்நிலையில், இன்று மாலை மாநகர பொறுப்பாளரை மாற்றக் கோரி, தி.மு.க தலைமை அலுவலகத்தை 100 -க்கும் மேற்பட்ட தி.மு.க நிர்வாகிகள் முற்றுகையிடப் போகிறார்களாம்.

TN Budget 2025: ``ஆட்சி முடியும் தருவாயில், கவர்ச்சிகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை..." - சீமான்

2026-ம் ஆண்டு தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட் பெரிதும் கவனிக்கத்தக்க பட்ஜெட்டாக இருந்தது. மகளிர், மாணவர்கள், மருத்துவத்துறை, நீர்வளத் துறை, தொழில்துறை எனப் பல்வேறு துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வெ... மேலும் பார்க்க

TN Budget 2025: தொழிற்பூங்கா முதல் மெட்ரோ ரயில் வரை... மதுரைக்கென 17 திட்டங்கள்!

"மதுரை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் பலவற்றை தமிழக நிதிநிலை அறிக்கை நிறைவேற்றியுள்ளது...." என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.சு.வெங்கடேசன்சு.வெங்கடே... மேலும் பார்க்க

Tasmac: `ரூ.1000 கோடி முறைகேடு' ED குற்றச்சாட்டு... அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

டாஸ்மாக் நிர்வாகத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ... மேலும் பார்க்க

TN Budget 2025: `நிறைய புதிய திட்டங்களை அறிவிச்சுருக்காங்க, ஆனா...' - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின... மேலும் பார்க்க

``இருமொழிக் கொள்கையை ஆதரிக்கும் கட்சிதான் தேர்தலில் வெற்றிபெறும்'' - அமைச்சர் KKSSR சொல்வதென்ன?

விருதுநகர் மாவட்டம், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் சாத்தூரில் உள்ள தனியார் மஹாலில் ... மேலும் பார்க்க

TN Budget 2025: பள்ளியில் செஸ் பாடம் டு புதிய பட்டப்படிப்புகள் வரை! - கல்வி தொடர்பான அறிவிப்புகள்

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 9:30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பல முக்கிய அறிவிப்புகள் த... மேலும் பார்க்க