மணலி: எண்ணெய் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து; வெடித்துச் சிதறிய பேரல்கள்.. பதற...
`புது படங்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி!' - திரைத்துறைக்கு முதல்வர் கொடுத்த `ட்ரீட்'
திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கடந்த மே 16-ம் தேதி முதல்வர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர்.
உள்ளாட்சி வரி ரத்து, திரைப்படம் வெளியான சில நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகளுக்கு அனுமதி, சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வர் விஜய்யை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் முதல்வர் விஜய், புதிய திரைப்படம் வெளியான நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஐந்து காட்சிகள் வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறார்.
இதனால், விடுமுறை தினங்களில் திரையரங்குகளுக்கு எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த உத்தரவு குறித்து வெளியாகியிருக்கும் செய்திக் குறிப்பில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை 16.5.2026 அன்று திரைப்படத் துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'C' படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள், மாவட்டத்தைப் பொறுத்தளவில் உரிமம் வழங்கும் அலுவலர் /மாவட்ட ஆட்சியர்.
சென்னை மாநகரத்தைப் பொறுத்தளவில் மாநகர காவல் ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், புதிய திரைப்படம் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் மற்றும் உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஜந்து காட்சிகள் திரையிடவும் அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதி தனியாக பெறத் தேவையில்லை என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

















