செய்திகள் :

புனே: குடிபோதையில் கார் ஏற்றி இருவரைக் கொன்ற சிறுவன்; மகனின் ஜாமீனை ஆடிப்பாடி கொண்டாடிய தந்தை

post image

புனேயில் கடந்த 2024ம் ஆண்டு இரவில் தேநீர் அருந்த வெளியில் வந்த ஒரு பெண் உட்பட இரண்டு எஞ்சினியர்களை மைனர் வாலிபர் ஒருவர் குடிபோதையில் கார் ஏற்றிக் கொன்றார்.

இக்கொலை சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டது. மைனரைக் காப்பாற்ற அரசியல்வாதிகள் தலையிட்டனர். அதோடு அந்த வாலிபருக்கு அவர் கைது செய்யப்பட்ட காவல் நிலையத்தில் ராஜ மரியாதை வழங்கப்பட்டது.

மது அருந்தி இருக்கிறாரா என்பதை சோதிக்க ரத்த பரிசோதனைக்காக மைனர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கிருந்த டாக்டர்கள் அந்த மைனரின் ரத்தத்தையே மாற்றி அவர் மது அருந்தவில்லை என்று சான்றிதழ் வழங்கினர்.

சம்பவத்தின் போது மைனர் குடிபோதையில் இல்லை என்பதை உறுதிப்படுத்த மைனரின் இரத்த மாதிரிகளை மாற்றி மோசடி செய்ய முயன்றதாக மைனரின் தந்தை அகர்வால் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.

விபத்துக்குப் பொறுப்பேற்குமாறு அவர்களது டிரைவரை வற்புறுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. மைனர் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

விபத்து ஏற்பட்ட கார்
விபத்து ஏற்பட்ட கார்

மைனர் கடந்த 2024ம் ஆண்டு மே 19ம் தேதி தனது நண்பர்களுடன் அதிகாலை வரை மது அருந்திவிட்டு மிகவும் ஆடம்பரமான போர்ஸ் காரை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது. இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த மைனர் வாலிபருக்கு ஜாமீன் கேட்டு அவரது பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மனுதாரர் கடந்த 22 மாதங்களாக சிறையில் உள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்குவதாக கோர்ட் தெரிவித்தது. விசாரணை நீதிமன்றம் விதிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜாமீன் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

மைனர் மகன் ஜாமீனில் வெளியில் வந்ததை அந்த வாலிபரின் தந்தை விஷால் அகர்வால் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து கொண்டாடிய வீடியோ இப்போது வைரலாகி இருக்கிறது. அகர்வால் தனது மகன் மற்றும் மனைவியுடன் சேர்ந்து ஆடிப்பாடி தனது மகன் ஜாமீனில் வெளி வந்ததைக் கொண்டாடி இருக்கிறார்.

அதோடு இந்தக் கொண்டாட்டத்தில் தனது மகனுக்கு மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினார். கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த இரண்டு மாலைகளில் ஒன்று ரூபாய் மாலையாகும்.

ஆட்டம் பாட்டத்தில் அகர்வால் வேறொருவரால் தூக்கப்பட்டார். அதே நேரத்தில் அவரது மகன் தனது தாயாரைத் தூக்கி அவர்கள் நடனமாடினார்கள். இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க