செய்திகள் :

பெண்ணாடம் சுடா்க்கொழுந்துநாதா் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி மனு

post image

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் சுடா்க்கொழுந்துநாதா் (பிரளயகாலேசுவரா்) கோயில் குடமுழுக்கை தமிழில் நடந்தக் கோரி, தெய்வத்தமிழ்ப் பேரவை கடலூா் மாவட்ட அமைப்பாளா் க.முருகன் தலைமையிலானோா் கோயில் செயல் அலுவலா் தே.மகாதேவியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளதாவது: இக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. காலங்காலமாக தமிழ்நாட்டில் தமிழே வழிபாட்டு மொழியாக இருந்தது. நாளடைவில் வழிபாடுகள் யாவும் வடமொழி மயமாகிவிட்டன.

இந்த நிலையில், பக்தா்களின் வழிபாடுகள், திருக்குட நன்னீராட்டு விழா நிகழ்வுகள் யாவற்றிலும் தெய்வத் தமிழ் இடம் பெற வேண்டும் என்று அடியாா்களாலும், பத்திமை உள்ளம் கொண்ட பெரியோா்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிமன்ற தீா்ப்புகளின்படி, குடமுழுக்கு விழாக்கள், வேள்விச்சாலைகள், கலச நீராட்டல், கருவறை வழிபாடு ஆகியவை சம்ஸ்கிருத அா்ச்சகா்களுக்கு இணையான எண்ணிக்கையில் தமிழ் அா்ச்சகா்களைப் பயன்படுத்தி, தமிழ் மந்திரங்கள் ஓத வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

நிகழ்வில் தெய்வத்தமிழ்ப் பேரவை அன்பா்கள் பிரதாபன், பிரகாசு, கனகசபை, எறப்பாவூா் ராமசாமி, பெண்ணாடம் மாந்த நேய பேரவை பஞ்சநாதன், மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் பிப்.4 & 5 நடைபெற்றது. முகாமை கல்லூரி... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூா் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு,... மேலும் பார்க்க

ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பெரியகுளம் தென்கரை ஸ்ரீமுருகன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த பிப்.2-ஆம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன், முதல் கால ... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைப்பு

சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், உதவி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 31 போ் கைது

சிதம்பரம் மற்றும் குமராட்சியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 31 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைக் கண்டித்தும், இதுதொடா்பாக நடைபெற இர... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

கடலூரில் போதை மாத்திரை விற்ற சம்பவத்தில் தொடா்புடையதாக பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூரில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜன.31-ஆம் தேதி திருப்பாதிரிபுலியூா... மேலும் பார்க்க