செய்திகள் :

பேச்சுவார்த்தை தோல்வி: "ஈரானுக்கு கெட்ட செய்தி; ஆனாலும் ஒரு நல்ல செய்தி" - அமெரிக்கா சொல்வது என்ன?

post image

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசியதாவது...

"எங்களுடைய நிபந்தனைகளை ஈரான் ஒத்துக்கொள்ளவில்லை.

நல்ல நம்பிக்கையுடனும், ஒப்பந்தம் மேற்கொள்ளவும் வந்திருக்கிறோம் என்று அதிபர் கூறினார்.

ஆனால், அதற்கான வழி இங்கு எதுவும் இல்லை.

ஜே.டி.வான்ஸ் - ஷெபாஸ் ஷெரீப்
ஜே.டி.வான்ஸ் - ஷெபாஸ் ஷெரீப்

வரும் காலத்தில் ஈரான் எந்தவொரு அணு ஆயுதத்தையும் தயாரிக்கக் கூடாது. இப்போது இருக்கும் வசதியையும் அழிக்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால், அதில் அவர்கள் உடன்படுவதாக இல்லை.

எங்களுடைய நிபந்தனைகள் என்ன, எங்களுடைய ஒப்புதல்கள் என்ன என்பதை தெளிவாகக் கூறிவிட்டோம். ஆனால், அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்வதாக இல்லை.

பல விஷயங்கள் குறித்து ஈரானிடம் பேசினோம். அது நல்ல செய்தி.

ஆனால், எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை என்பது கெட்ட செய்தி.

இது அமெரிக்காவை விட, ஈரானுக்குத்தான் மிகுந்த கெட்ட செய்தி" என்று பேசியிருக்கிறார்.

ஈரானின் அரசு செய்தி நிறுவனம் டெலிகிராமில் குறிப்பிட்டுள்ளதாவது...

"ஈரான் மக்களின் தேசிய நலனுக்காக ஈரான் 21 மணி நேரம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

ஈரானின்‌ குழு பல முன்னெடுப்புகள் எடுத்தும், அமெரிக்காவின் காரணமில்லாத நிபந்தனைகள் பேச்சுவார்த்தையை முன்னோக்கி எடுத்து செல்லவில்லை.

அதனால்தான், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ஒரே சந்திப்பில் ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும் என்கிற எதிர்பார்ப்பு யாருக்கும் இருக்காது" என்று தெரிவித்துள்ளது.

பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் என்ன?

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய விஜய் சில வாக்குறுதிகளை அறிவித்தார்.விஜய் பேசியதாவது, 'நாளை மறுநாள் நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளை புத்... மேலும் பார்க்க

பீகார் அரசியலில் புதிய சகாப்தம்: முதல் பாஜக முதலமைச்சராகிறார் சாம்ராட் சவுத்ரி - பின்னணி என்ன?

பீகாரில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த நிதிஷ் குமாரின் ஆட்சி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பா.ஜ.க-வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பதவியேற்க உள்ளார். இதன் மூலம், பீகார் மாநில ... மேலும் பார்க்க

'டார்கெட் 1 லட்சம் வாக்குகள்!' - பெரம்பூரில் வெல்வாரா விஜய்? |களநிலவரம் ஓர் அலசல்!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், பெரம்பூரில் விஜய்யை 1 லட்சம் வாக்குகள் பெற வைப்போம் என டார்கெட் நிர்ணயித்து தொகுதிக்குள் தவெகவினர் பணியாற்ற... மேலும் பார்க்க

நொய்டா போராட்டம்: `பாக்கிஸ்தான் சதி' - அரசு குற்றச்சாட்டு; 2027 தேர்தலை நோக்கித் திரும்பும் அரசியல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சூழலைக் கண்டித்து 40,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த விவகாரம் அம்மாநிலத்தி... மேலும் பார்க்க

``பிரதமர் மோடிக்கு இது இறுதி எச்சரிக்கை" - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் வீடியோ

நாளை மறுநாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றத்தில் தீபம்; மாநில விழாவாக தைப்பூசம் - வெளியானது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 14) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. மத்திய அமைச்சரும், முன்னாள் தேசிய தலைவருமான ஜேபி நட்டா 'புதிய யுகம் படைக்கும் தாமரை... மேலும் பார்க்க