செய்திகள் :

``பேட்மிண்டன் நடத்துவதற்கு டெல்லி தகுந்த இடமல்ல" - போட்டியிலிருந்து விலகிய ஆண்டன்சென்!

post image

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலையிலிருந்து தீவிரமான பிரிவுகளுக்குக் கீழ் சென்றிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ``நான் இங்கு இரண்டு நாள்கள் கூட தங்குவதில்லை, அதற்குள்ளாகவே எனக்கு தொற்று வந்துவிடுகிறது." என வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

 ஆண்டர்ஸ் ஆண்டன்சென்
ஆண்டர்ஸ் ஆண்டன்சென்

இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில், இந்தியா ஓபன் 2026 பேட்மிண்டன் போட்டி 2026, ஜனவரி 13 முதல் ஜனவரி 18 வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா தவிர சீனா, தென்கொரியா, டென்மார்க், தாய்லாந்து, ஜப்பான், மலேசிய, இந்தோனேசியா, தைவான் உள்ளிட்ட பல்வேறு நாட்டின் வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் டெல்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து உலகின் மூன்றாம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆண்டன்சென் அதிரடியாக விலகியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ``நான் ஏன் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா ஓபன் போட்டியில் இருந்து விலகினேன் என்று பலரும் ஆர்வமாக (கேள்வி எழுப்பி) உள்ளனர். தற்போது டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, ஒரு பேட்மிண்டன் தொடரை நடத்துவதற்கு இது தகுந்த இடம் என்று நான் நினைக்கவில்லை.

 ஆண்டர்ஸ் ஆண்டன்சென்
ஆண்டர்ஸ் ஆண்டன்சென்

வரும் கோடைக் காலத்தில் (ஆகஸ்ட் மாதம்) டெல்லியில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும்போது, நிலைமை சீராகும் என்று நம்புகிறேன். இதன் விளைவாக, (கட்டாயப் போட்டியில் பங்கேற்காததற்காக) பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பு (BWF) மீண்டும் எனக்கு 5,000 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆண்டன்செனைத் தொடர்ந்து, மற்றொரு டேனிஷ் வீராங்கனையான மியா பிளிச்பெல்ட்டும், போட்டி நடைபெறும் இந்திரா காந்தி மைதானத்தின் சுகாதாரம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளார். பயிற்சி மைதானங்கள் அழுக்காக இருப்பதாகவும், பறவைகளின் எச்சங்கள் ஆங்காங்கே காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் (BAI) பொதுச் செயலாளர் சஞ்சய் மிஸ்ரா, ``பயிற்சியின் போது கூறப்பட்ட குறைகள் சரிசெய்யப்பட்டு வருகிறது. பிரதான அரங்கம் சர்வதேச தரத்தில் பராமரிக்கப்படுகிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

IND vs NZ: ``அதிக ஆர்ப்பரிப்பு பிடிக்கல; எனக்கும், தோனிக்கும் அப்படி தான் நடக்குது, ஆனா.!" - கோலி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று (ஜன.12) வதோ... மேலும் பார்க்க

BCB:``பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வராது!" - ஐசிசி யிடம் கோரிக்கை வைத்த பிசிபி!

2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாட ஏலம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையி... மேலும் பார்க்க

"இந்திய கால்பந்தை FIFA காப்பாற்ற வேண்டும்" - வேதனையுடன் வீடியோ வெளியிட்ட கால்பந்து வீரர்கள்

இந்திய கால்பந்தை FIFA காப்பாற்ற வேண்டும் என்று கால்பந்து வீரர்கள் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். கடந்தாண்டு செப்டம்பரிலேயே தொடங்க வேண்டிய ISL கால்பந்து தொடர், போதிய நிதி இல்லாததால் இன... மேலும் பார்க்க

khushi mukherjee: "சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும்..!"- சர்ச்சைக்கு விளக்கம் அளித்த குஷி முகர்ஜி

பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார் என்று சொன்ன விஷயம் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதாவது சில தினங்களுக்கு முன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி... மேலும் பார்க்க

Sports 2025: ஆர்சிபி சாம்பியன் டு ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை - ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகள் ஓர் ரீவைண்ட்

2025 ஆம் ஆண்டு முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, உலக நிகழ்வுகள் என பல முக்கியமான விஷயங்கள் அரேங்கேறி இருக்கின்றன. அந்தவகையில் 2025 உலக அளவில் நடந்த முக்கிய ஸ்ப... மேலும் பார்க்க