செய்திகள் :

பேராசிரியையுடன் நெருக்கம்; போட்டோ, வீடியோவை கணவருக்கு அனுப்பிய பேராசிரியர் - விசாரிக்கும் போலீஸ்!

post image

திருச்சி, திருவெறும்பூர் அருகே தேசிய தொழில்நுட்ப கழகம் இயங்கி வருகிறது. அங்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பேராசிரியராக ஜெரால்டு (வயது: 50) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், என்.ஐ.டி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கும், அதே கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த போது வீடியோ மற்றும் புகைப்படங்களை ஜெரால்டு தனது செல்போனில் எடுத்து வைத்திருந்தார். கடந்தாண்டு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், இருவரும் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்தனர். இதனிடையே, கடந்த வாரம் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், ஜெரால்டு, அந்த பேராசிரியையின் கணவர் மற்றும் சில மாணவர்களின் செல்போன்களுக்கு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ, புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

trichy

இதனால், அதிர்ச்சியடைந்த பேராசிரியை, திருச்சி சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஜெரால்டு மீது திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டில் இருந்த ஜெரால்டை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

`இங்கதான் இருப்பா' - சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சால்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி குருவலட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அதே பகுதி... மேலும் பார்க்க

'எனக்கு ​ஐபோன், உனக்கு பைக்' தாத்தாவை கொன்று நகையை திருட காதலனுக்கு கொட்டேஷன் கொடுத்த 13 வயது பேத்தி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கருவாற்றா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சிவன்குட்டி (65). அம்பலப்புழாவைச் சேர்ந்த சிவன்குட்டி, குடும்பத்துடன் கொல்லம் பரவூரில் வசித்து வந்தார். மகளின் கணவர் ப... மேலும் பார்க்க

மதுரை: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கத்தியைக் காட்டி ரூ. 35 ஆயிரம் பறிப்பு; வைரல் வீடியோவின் பின்னணி

மதுரை - மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தி... மேலும் பார்க்க

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த ... மேலும் பார்க்க

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க