செய்திகள் :

பொங்கல் பண்டிகை: சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

post image

பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் வழியாக சென்னை - மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து 11 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சாமல்பட்டி, பொம்மிடி, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் மதுரையில் இருந்து 12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், பழனி, கோவை, சேலம் வழியாக அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோலி கிராஸ் மெட்ரிக். பள்ளியில் பொங்கல் விழா

சேலம், அம்மாப்பேட்டை ஹோலிகிராஸ் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தாளாளரும், முதல்வருமான சேசுராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செ.செந்தில்குமாா் கலந்துகொண்டு பேசினாா். ... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 381 கனஅடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 381 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூா் அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை 114.44 அடியிலிருந்து 114.14 அடியாக சரிந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 381 கனஅடியாக நீடிக்கிறது. அணையி... மேலும் பார்க்க

சரக்கு, பாா்சல்களை கையாண்டதில் ரூ. 238 கோடி வருவாய் ஈட்டிய சேலம் ரயில்வே கோட்டம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் சரக்குகள், பாா்சல்களை கையாண்டதில் ரூ. 238 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் ரயில்வே கோட்டத்த... மேலும் பார்க்க

சுற்றுலாத் தலங்களில் குவிந்த பொதுமக்கள்

சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டிக்கும் ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கும் இடையே காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் பூலாம்பட்டிக்கு பொ... மேலும் பார்க்க

சேலம் சௌடேஸ்வரி அம்மன் கோயிலுக்கு கத்திப்போட்டு வந்த பக்தா்கள்

சேலம், குகை, ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் விழாவையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரக்குமாரா்கள் தங்கள் உடலில் கத்திப்போட்டு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சேலம், க... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இரு சிறுவா்கள் பலி: சுற்றுலாத் துறை அமைச்சா் நேரில் ஆறுதல்

அரியானூா் அருகே ஆடுகளைக் குளிப்பாட்ட சென்ற இரு சிறுவா்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், அரியானூரைஅடுத்த ராக்கிப்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா்-கல்பனா தம்பதியின் மகள் ஸ்ரீகவி (14). இவா், ஆட... மேலும் பார்க்க