செய்திகள் :

`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீதிமன்றம் அதிரடி

post image

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2017 ஆம் ஆண்டில் வழிப்பறி செய்ய திட்டமிட்டதாக நான் உட்பட 5 பேர் மீது மதுக்கூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பொய்யாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் 8 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் உள்ளனர். இதனால் எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை, வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சித்தபோது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

போலீஸார் புனைந்த பொய் வழக்கு

எந்த ஆதாரமும் இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கால் என் எதிர்காலம் பாதிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக விசாரணை நிலையிலேயே உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும், இதற்காக எனக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "மனுதாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து மதுக்கூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு 10 இன்ஸ்பெக்டர்கள் மாறி விட்டனர். இவர்கள் யாரும் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 10 இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

இந்த வழக்கில் நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், "குற்றம் புரியும் நோக்குடன் சிலர் கூடியிருந்தனர் என்று வழக்கு பதிவு செய்யும்போது அதை நிரூபிக்க ஆதாரங்கள் இருக்க வேண்டும். இந்த வழக்கில் இதுபோன்ற எந்த ஆதாரமும் இல்லை. போலீஸார் 8 ஆண்டுகளாக விசாரணை நடத்தவில்லை, 2017-ல் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை 24.6.2025-ல்தான் நீதிமன்றத்துக்கே அனுப்பியுள்ளனர். இது பொய் வழக்கு என்று தெரிவதால் வழக்கு ரத்து செய்யப்படுகிறது, ரத்து செய்வது மட்டும் மனுதாரருக்கு முழுமையான நீதியை வழங்காது.

ஒருவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் நற்பெயருக்கு களங்கம், சமூக அந்தஸ்து, வேலை வாய்ப்பு இழப்பு, உறவுகளில் பிரச்சனை, உளவியல் சிக்கல் ஏற்படுகிறது.

போலீஸாரின் அதிகார மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற உரிமை உள்ளது என ஐநா அறிவித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 8 லட்சத்தை தமிழ்நாடு உள்துறை அமைச்சகம் வழங்க வேண்டும், இதை சம்பந்தப்பட்ட போலீஸாரிடமிருந்த வசூலிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

Surya Kant: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூர்ய காந்த்; மோடி, அமித் ஷா பங்கேற்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாய் பதவிக்காலம் நவம்பர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்றார். உச்ச நீதிமன... மேலும் பார்க்க

``என் தீர்ப்புகளில் மிக முக்கியமானது" - புல்டோசர் வழக்கு குறித்து பகிர்ந்த பி.ஆர்.கவாய்

உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பணியாற்றிய பி.ஆர். கவாய் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். அதனால் நேற்று கடைசி வேலை நாளின்போது, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (SCBA) பிரிவு உபசார விழா நடைப... மேலும் பார்க்க

`கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பு’ - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.அதில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு, திட்டமிடுவதற்கு,... மேலும் பார்க்க

மசோதா : குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளும், உச்ச நீதிமன்றத்தின் பதில்களும் | முழு விவரம்

ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர், மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், அதன் மீது குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.அந்த 14 ... மேலும் பார்க்க

`ஒரு மாநிலத்துக்கு இரு அதிகார அமைப்புகளை ஏற்க முடியாது’ - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த ... மேலும் பார்க்க

`ஆளுநர்கள் காலவரையின்றி நிறுத்திவைக்க முடியாது’- குடியரசுத் தலைவர் கேள்விக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த ... மேலும் பார்க்க